”இடைநிற்றலே இல்லாத மாநிலமாகத் தமிழ்நாட்டை உயர்த்தியுள்ளோம்” - முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பெருமிதம்!
பள்ளிக்கு வராமல் உள்ள 6 முதல் 8 ஆம் வகுப்பு பயிலும் இடைநிற்றல் மாணவர்களை கண்டறிந்து, மாணவர்களை மீண்டும் அழைத்து பள்ளியில் சேர்க்கும் முயற்சியில் விருதுநகர் மாவட்ட ஆட்சித்தலைவர் வீ.ப.ஜெயசீலன் தலைமையிலான அதிகாரிகள் அம்மாவட்டம் முழுவதும் நேரடி கள ஆய்வு மேற்கொண்டனர்.
இது தொடர்பான செய்திகள் வெளியான நிலையில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இடைநிற்றலே இல்லாத மாநிலமாகத் தமிழ்நாட்டை உயர்த்தியுள்ளோம் என பெருமிதம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் பதிவில், “ வாழ்த்துகள் ஜெயசீலன். கடந்த 4 ஆண்டுகளில் இடைநிற்றலே இல்லாத மாநிலமாகத் தமிழ்நாட்டை உயர்த்தியுள்ளோம்! இந்த நிலை தொடர அர்ப்பணிப்போடு பணியாற்றும் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி மற்றும் கல்வித்துறை அதிகாரிகள், ஆசிரியர்களுக்கு வாழ்த்துகள்.
வாழ்த்துகள் @VNRCollector 💐
கடந்த 4 ஆண்டுகளில் ‘இடைநிற்றலே இல்லாத’ மாநிலமாகத் தமிழ்நாட்டை உயர்த்தியுள்ளோம்! இந்த நிலை தொடர அர்ப்பணிப்போடு பணியாற்றும் மாண்புமிகு @Anbil_Mahesh, @tnschoolsedu அதிகாரிகள், ஆசிரியர்கள் ஆகியோருக்கும் வாழ்த்துகள்!
ஆசிரியர்களுக்கும், பொதுமக்களுக்கும்… https://t.co/jnvrjNqIGB
— M.K.Stalin (@mkstalin) June 15, 2025
ஆசிரியர்களுக்கும், பொதுமக்களுக்கும் என் வேண்டுகோள்: இந்த இயக்கத்தில் நீங்களும் இணைய வேண்டும்! உங்கள் பகுதியில், பள்ளி செல்லாத மாணவர்கள் இருந்தால் கண்டறியுங்கள். ‘கல்வியை மிஞ்சிய செல்வம் எதுவும் இல்லை’ என அவர்களுக்கு உணர்த்துங்கள். காலை உணவுத் திட்டம், ஸ்மார்ட் கிளாஸ் ரூம், நான் முதல்வன், புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன் என ஒவ்வொரு நிலையிலும் அவர்களைக் கைப்பிடித்து அழைத்துச் செல்ல அரசின் திட்டங்கள் இருப்பதை எடுத்துக் கூறுங்கள். ‘கல்வியில் சிறந்த தமிழ்நாடு’ என்பதை உறுதிசெய்வோம்”
இவ்வாறு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.