For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

800 விருந்தினர்கள்! பிரமாண்ட கப்பலில் ஆனந்த் அம்பானியின் திருமணத்தின் 2-வது முன்வைபவம்!

11:33 AM May 21, 2024 IST | Web Editor
800 விருந்தினர்கள்  பிரமாண்ட கப்பலில் ஆனந்த் அம்பானியின் திருமணத்தின் 2 வது முன்வைபவம்
Advertisement

ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்சண்ட் இரண்டாவது முன் திருமண வைபவம் பிரமாண்டமாக கொண்டாடப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Advertisement

பிரபல தொழிலதிபரான முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானிக்கும், என்கோர் ஹெல்த்கேர் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி விரென் மெர்ச்சண்ட்டின் மகள் ராதிகா மெர்ச்சண்டுக்கும் கடந்த ஆண்டு ஜனவரி 19, 2023-ல் நிச்சயதார்த்தம் நடைபெற்றது.  மும்பையில் உள்ள முகேஷ் அம்பானியின் இல்லமான அன்டில்லாவில் குஜராத் மாநில பாரம்பரியப்படி நிச்சயதார்த்தம் நடைபெற்றது.

ஆனந்த் அம்பானிக்கும்,  அவரது காதலியான ராதிகா மெர்செண்டுக்கும் வருகின்ற ஜூலை மாதம் 12-ம் தேதி திருமணம் நடைபெறவுள்ளது.  ஏற்கனவே மகள் இஷா அம்பானி மற்றும் மூத்த மகன் ஆகாஷ் அம்பானியின் திருமணங்களை வெகு விமர்சையாக நடத்தி முடித்த முகேஷ் அம்பானி,  தற்போது இளைய மகனான ஆனந்த் அம்பானி திருமணத்தையும் மிக பிரம்மாண்டமாக ஏற்பாடு செய்து வருகிறார்.

அதற்கான முன் திருமண வைபவங்கள் குஜராத் மாநிலம் ஜாம் நகரில்,  மார்ச் 1 முதல் 3 ஆம் தேதி வரை நடைபெற்றது.  இந்த முன் திருமண வைபவத்தில் நடிகர்கள் அமிதாப் பச்சன்,  ஷாருக்கான்,  சல்மான் கான்,  அமீர் கான்,  ரஜினி காந்த், சஞ்சய் தத்,  அபிஷேக் பச்சன்,  ராம் சரண்,  சயீப் அலிகான்,  ரன்பீர் சிங்,  ரன்வீர் சிங், நடிகைகள் ஐஸ்வர்யா ராய்,  கரீனா கபூர்,  தீபிகா படுகோன்,  சாரா அலிகான்,  ஆலியா பட், ஜான்வி கபூர்,  கேத்ரினா கைஃப்,  இயக்குநர் அட்லி உட்பட ஒட்டுமொத்த இந்திய திரையுலகமும் கலந்து கொண்டனர்.

கிரிக்கெட் வீரர்கள் சச்சின்,  தோனி,  ரோகித் சர்மா,  ஹர்திக் பாண்டியா,  பிராவோ,  ரஷித் கான் உட்பட ஏராளமான விளையாட்டு பிரபலங்களும் விழாவில் பங்கேற்றனர். இதையடுத்து, வெளிநாடுகளில் இருந்தும் 1,000 - த்திற்கும் மேற்பட்ட சிறப்புவிருந்தினர்கள் கலந்து கொண்டனர்.

இந்நிலையில், மே 28ம் தேதி முதல் மே 30ம் தேதி வரை தெற்கு பிரான்ஸ்  கடற்கரையோரத்தில் சொகுசு கப்பலில் ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சண்டின் இரண்டாவது முன் திருமண வைபவம் நிகழ்ச்சி நடைபெற உள்ளதாக தகவல் தெரிவித்துள்ளனர்.

இதையும் படியுங்கள் : முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி நினைவு நாள் – காங்கிரஸ் தலைவர்கள் மரியாதை!

இந்த கொண்டாட்டத்தில் சுமார் 800 விருந்தினர்கள் கலந்து கொள்ள இருப்பதாகவும்,  600 ஊழியர்கள் பணியில் ஈடுபட உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.  இத்தாலியில் இருந்து புறப்படும் இந்த கப்பல் 4380 கி.மீ தூரம் பயணம் செய்யவுள்ளதாக தெரிவித்தனர்.

இதனிடையே ஜூலை மாதம் பிரிட்டன் தலைநகர் லண்டனில் உள்ள ஸ்டோக் பார்க்கில் இருவருக்கும் திருமணம் நடக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  இந்த திருமண நிகழ்ச்சியில் முக்கிய வி.ஐ.பி.க்கள்,  திரைப்பட பிரபலங்கள்,  கிரிக்கெட் வீரர்கள், தொழிலதிபர்கள் உள்ளிட்ட பல பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Tags :
Advertisement