For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

#78independenceday | தமிழ்நாட்டைச் சேர்ந்த காவல் அதிகாரிகள் 23 பேருக்கு குடியரசுத் தலைவர் பதக்கம்!

11:04 AM Aug 14, 2024 IST | Web Editor
 78independenceday   தமிழ்நாட்டைச் சேர்ந்த காவல் அதிகாரிகள் 23 பேருக்கு குடியரசுத் தலைவர் பதக்கம்
Advertisement

தமிழ்நாட்டைச் சேர்ந்த 23 காவல் அதிகாரிகளுக்கு குடியரசுத் தலைவர் பதக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. 

Advertisement

நாடு முழுவதும் 78-வது சுதந்திர தினம் நாளை கொண்டாடப்பட உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை மத்திய, மாநில அரசு சார்பில் துறை ரீதியாக மேற்கொண்டு வருகின்றனா். ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தினத்தை முன்னிட்டு சிறப்பாக செயல்படும் போலீஸ் அதிகாரிகளுக்கு குடியரசு தலைவர் பதக்கம் வழங்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் நடப்பு ஆண்டுக்கான சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழகத்தை சோ்ந்த 23 போலீஸ் அதிகாரிகளுக்கு குடியரசு தலைவர் பதக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி சிவில் சப்ளைஸ் டி.ஜி.பி.யாக இருந்து வரும் வன்னிய பெருமாள், தாம்பரம் காவல் ஆணையா் அபின் தினேஷ் மோதக், ஐ.ஜி. கண்ணன் உள்பட 23 போலீஸ் அதிகாரிகளுக்கு இந்த பதக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது.
Tags :
Advertisement