Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

நாடு முழுவதும் இன்று 75வது குடியரசு தினம் உற்சாக கொண்டாட்டம் - டெல்லியில் நடைபெறும் விழாவில் பிரான்ஸ் அதிபர் மேக்ரான் பங்கேற்பு

06:48 AM Jan 26, 2024 IST | Jeni
Advertisement

குடியரசு தினவிழா இன்று நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்படுவதை முன்னிட்டு முக்கிய பகுதிகளுக்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Advertisement

75வது குடியரசு தினவிழாவையொட்டி டெல்லி செங்கோட்டையில் இன்று காலை நடைபெறும் நிகழ்ச்சியில் குடியரசுத் தலைவர் திரௌவுபதி முர்மு தேசிய கொடியை ஏற்றி வைக்கிறார். தொடர்ந்து முப்படை வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை அவர் ஏற்றுக் கொள்கிறார். அணிவகுப்பைத் தொடர்ந்து, தமிழ்நாடு, உத்தரப் பிரதேசம், தெலங்கானா, குஜராத் உள்ளிட்ட மாநிலங்களின் அரசுத் துறைகள் சார்பில் அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பும் நடைபெறுகிறது.

குடியரசு தின கொண்டாட்டத்தையொட்டி தலைநகர் டெல்லி முழுவதும் கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. டெல்லியின் முக்கிய சாலைகளில் விடிய விடிய வாகன சோதனையில் போலீசார் ஈடுபட்டனர். துணை ராணுவப் படையினர் உட்பட 70,000 பேர் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

டெல்லி விழாவில் சிறப்பு விருந்தினராக பிரான்ஸ் நாட்டு அதிபர் இமானுவேல் மேக்ரோன் கலந்து கொள்கிறார். முன்னதாக தனி விமானம் மூலம் ராஜஸ்தான் மாநிலம், ஜெய்ப்பூர் வந்த அவரை விமான நிலையத்தில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் வரவேற்றார்.

இதையும் படியுங்கள் : கோவையை சேர்ந்த வள்ளி ஒயிற்கும்மி ஆசிரியர் பத்திரப்பனுக்கு பத்மஸ்ரீ விருது அறிவிப்பு!

ஜெய்ப்பூரில் திறந்த வாகனம் மூலம் சாலை வழியே பயணம் செய்த பிரதமர் மோடியும் அதிபர் மெக்ரானும் மக்களை சந்தித்தனர். பின்னர் அங்கிருந்த கைவினைப் பொருட்கள் விற்பனை செய்யும் கடைக்குள் இருநாட்டு தலைவர்களும் சென்றனர். அங்கு விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த ராமர் கோவில் மாதிரியை வாங்கி, மேக்ரானுக்கு பிரதமர் மோடி பரிசளித்தார். தொடர்ந்து அங்குள்ள சிறிய தேநீர் கடையில் சூடான மசாலா டீ வாங்கி இரு தலைவர்களும் அருந்தினர்.

Tags :
75thRepublicDayDelhiFranceGuestImmanuelMacronIndiaRepublicDay
Advertisement
Next Article