For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

வீட்டில் சிறுவன் தனியாக இருந்த போது நேர்ந்த விபரீதம்!

09:36 PM Jan 11, 2024 IST | Web Editor
வீட்டில் சிறுவன் தனியாக இருந்த போது நேர்ந்த விபரீதம்
Advertisement

தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் 7 வயது சிறுவன் கொலை வழக்கில், பாலியல் வன்புணர்வில் ஈடுபட்டு கொலை செய்த 19 வயது இளைஞர் சூரங்குடி போலீசாரால் கைது செய்யப்பட்டார். 

Advertisement

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள வேம்பார் கிராமத்தைச் சேர்ந்த
முத்துக்குமார் என்பவரின் மகன் அஸ்வின் குமார் (7). இந்த சிறுவன் நேற்று ( 10.01.2024) காலை 9 மணி அளவில் கடலோர காவல் நிலையத்திற்கு எதிரில் உள்ள அவரது வீட்டின்
முன்பு மர்மமான முறையில் கத்தியால் குத்தப்பட்டு, கொலை செய்யப்பட்டு கிடந்தார்.
இதனையடுத்து, சிறுவனின் உடலை கைப்பற்றிய சூரங்குடி போலீசார், தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக உடலை அனுப்பி வைத்து தீவிர
விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இந்நிலையில், வேம்பார் கிராமத்தை சேர்ந்த தாமஸ் (19) என்பவரை சந்தேகத்தின்
பேரில் பிடித்து விசாரணை மேற்கொண்டனர். மது போதையில் இருந்த தாமஸ்  வீட்டிற்குள் தனியாக இருந்த 7 வயது சிறுவனை பாலியல் வன்புணர்வு செய்ய முயன்றதாக கூறப்படுகிறது. அப்போது, சிறுவன் வீட்டில் கத்தி அலறியதால் ஆத்திரம் அடைந்த தாமஸ், தான் வைத்திருந்த சிறிய ரக கத்திகளால் சிறுவன் அஸ்வின் குமாரை கொடூரமாக கொலை செய்துவிட்டு தப்பி ஓடியதாக கூறப்படுகிறது.

மேலும், தாமஸை சூரங்குடி காவல் நிலைய போலீசார் கைது செய்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விசாரணையில், தாமஸ் மீன் பிடி தொழில் செய்து வந்ததாகவும், எப்போதும் மது போதையில் இருந்ததாகவும் கூறப்படுகிறது. தற்போது, சிறுவன் அஸ்வின் குமாரின் பிரேத பரிசோதனை தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் நடைபெற்று வருகிறது. உடற்கூறாய்வு முடிந்த பிறகு, சிறுவன் கொலை செய்யப்பட்ட பின்னணி முழுமையாக தெரியவரும் என சூரங்குடி காவல் நிலைய போலீசார் தெரிவித்துள்ளனர்.

Tags :
Advertisement