For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

ராமர் கோயில் பிரதிஷ்டை விழா - இந்தியா முழுவதும் ரூ.500 கோடிக்கு பட்டாசுகள் விற்பனை என பட்டாசு உற்பத்தியாளர்கள் சங்க தலைவர் கணேசன் நியூஸ் 7 தமிழுக்கு பேட்டி!

02:36 PM Jan 21, 2024 IST | Web Editor
ராமர் கோயில் பிரதிஷ்டை விழா   இந்தியா முழுவதும் ரூ 500 கோடிக்கு பட்டாசுகள் விற்பனை என பட்டாசு உற்பத்தியாளர்கள் சங்க தலைவர் கணேசன் நியூஸ் 7 தமிழுக்கு பேட்டி
Advertisement

ராமர் கோயில் பிரதிஷ்டை விழாவையொட்டி சிவகாசி உட்பட இந்தியா முழுவதும் ரூ.500 கோடி வரை பட்டாசுகள் விற்பனையாகியுள்ளதாக தமிழ்நாடு பட்டாசு மற்றும் கேப்வெடி உற்பத்தியாளர்கள் சங்க தலைவர் கணேசன் நியூஸ் 7 தமிழுக்கு பேட்டியளித்துள்ளார்.

Advertisement

கடந்த 2020 ஆகஸ்ட் முதல் அயோத்தியில் ராமர் கோயில் பூமி பூஜை செய்யப்பட்டு கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. 2.27 ஏக்கர் பரப்பளவில் 3 அடுக்கில் உருவாகி வரும் ராமர் கோயிலின் கட்டுமானப் பணிகள் முடிவடையவுள்ள நிலையில், கோயில் கருவறையில் மூலவர் குழந்தை ராமர் சிலை நாளை  பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது.

இந்த விழாவில் கலந்து கொள்ள நாடு முழுவதும் உள்ள பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள், பிரமுகர்கள், நடிகர்கள் என பலருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதற்காக உத்தரப்பிரதேச மாநிலம், அயோத்தியில் பிரம்மாண்டமான ஏற்பாடுகள் செய்யப்பட்டு அந்த நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது. இந்த நிகழ்வில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் சிறப்பு அழைப்பாளர்கள் பங்கேற்கவுள்ளனர். பிரதமர் மோடி குழந்தை ராமர் சிலையை திறந்து வைக்க உள்ளார்.

நாளை நடைபெறவுள்ள இந்த ராமர் கோயில் பிரதிஷ்டை விழாவை இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதுமுள்ள இந்திய மக்கள் கொண்டாடுகின்றனர். இந்நிலையில், ராமர் கோயில் பிரதிஷ்டை விழாவையொட்டி சிவகாசி உட்பட இந்தியா முழுவதும் 500 கோடி வரை பட்டாசுகள் விற்பனையாகியுள்ளதாக தமிழ்நாடு பட்டாசு மற்றும் கேப்வெடி உற்பத்தியாளர்கள் சங்க தலைவர் கணேசன் நியூஸ்7 தமிழுக்கு பிரத்யேக பேட்டியளித்துள்ளார். மேலும், ஆண்டுதோறும் ஜனவரி 22-ம் தேதியை இந்திய தேசத்தின் தேசிய திருவிழா நாளாக அறிவித்து, தீபாவளி போல ஒவ்வொரு ஆண்டும் கொண்டாட வேண்டும் என அவர் மத்திய அரசை வலியுறுத்தியுள்ளார்.

Tags :
Advertisement