For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

வாணியம்பாடி அருகே பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து - 5 பேர் உயிரிழப்பு

08:50 AM Nov 11, 2023 IST | Jeni
வாணியம்பாடி அருகே பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து   5 பேர் உயிரிழப்பு
Advertisement

வாணியம்பாடி அருகே அரசு பேருந்தும் ஆம்னி பேருந்தும் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

Advertisement

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி தாலுகா செட்டியப்பனூர் பகுதியில், பெங்களூரிலிருந்து சென்னை வந்த அரசு விரைவுப் பேருந்து ஒன்று, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து, சென்னையில் இருந்து பெங்களூருக்கு சென்று கொண்டிருந்த ஆம்னி பேருந்தின் மீது நேருக்கு நேர் மோதியது.

இந்த விபத்தில் இரண்டு பேருந்து ஓட்டுநர்கள் உட்பட 4 ஆண்கள், ஒரு பெண் என 5 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 40-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். விபத்து குறித்த தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், காயமடைந்தவர்களை மீட்டு வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

இதையும் படியுங்கள் : விஜய் ஹசாரே கோப்பை தொடருக்கான தமிழ்நாடு அணி அறிவிப்பு - கேப்டனாக தினேஷ் கார்த்திக் நியமனம்

திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன், காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான், வாணியம்பாடி சட்டமன்ற உறுப்பினர் செந்தில்குமார் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சொந்த ஊருக்கு சென்று கொண்டிருந்த நிலையில், பேருந்துகள் ஒன்றோடு ஒன்று மோதிக்கொண்ட விபத்து, மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags :
Advertisement