Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

மக்களவையில் இருந்து மேலும் 49 எம்.பி.க்கள் இன்று இடைநீக்கம்!

03:52 PM Dec 19, 2023 IST | Web Editor
Advertisement

மக்களவையில் இருந்து மேலும் 49 எம்.பி.க்கள் இடைநீக்கம் செய்யப்படுள்ளனர். இதன்மூலம் இந்த கூட்டத் தொடரில் வரலாறு காணாத அளவிற்கு மொத்தம் 141 எம்.பி.க்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

Advertisement

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. டிசம்பர் 13-ம் தேதி கடந்த 2001-ம் ஆண்டு இந்திய நாடாளுமன்றம் மீது நடத்தப்பட்ட தாக்குதல் தினம் அனுசரிக்கப்பட்டது. தொடர்ந்து வழக்கம்போல் அவை இயங்கி வந்ததது. அப்போது மக்களவைக்குள் அத்துமீறி நுழைந்து 2 பேர் பார்வையாளர்கள் மாடத்தில் இருந்து கீழே குதித்து, கண்ணீர் புகை குண்டு வீசும் குப்பிகளை வீசினர்.

அதனை தொடர்ந்து இருவரையும் காவல் துறையினர் கைது செய்தனர். இதனால் நாடாளுமன்றத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. நாடாளுமன்ற அத்துமீறல் சம்பவம் தொடர்பாக விவாதம் நடத்தக் கோரி மக்களவையில் போராட்டம் நடத்தியதால் திமுக எம்பி கனிமொழி உள்பட எதிர்க்கட்சிகளை சேர்ந்த 14 எம்பிக்கள் ஏற்கனவே சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

இச்சூழலில், அதே கோரிக்கையை முன் வைத்து எதிர்க்கட்சி எம்பிக்கள் நேற்றும் அமளியில் ஈடுபட்டனர். இதன் காரணமாக நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் முழுவதிலிருந்தும் நேற்று மக்களவை எம்.பி.க்கள் 33 பேர் மற்றும் மாநிலங்கலவை எம்.பி.க்கள் 45 பேர் என மொத்தம் 78 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். 

இந்நிலையில் இதே கோரிக்கை முன்வைத்து இன்று அமலியில் ஈடுபட்ட 49 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மக்களவையில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில் 141 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இரு அவைகளில் இருந்தும் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். திருமாவளவன், கார்த்தி சிதம்பரம், ஜெகத்ரட்சகன், தனுஷ் குமார், சுப்ரியா சுலே, சசி தரூர், பரூக் அப்துல்லா, டிம்பிள் யாதவ் உள்ளிட்ட எம்.பி.க்கள் இன்று சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

Tags :
BJPCongressLok Sabha Security BreachmpNews7Tamilnews7TamilUpdatesparliamentParliament Security Lapsesuspended
Advertisement
Next Article