Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

தென்காசியில் ஒரே நாளில் 4 பேர் குண்டர் சட்டத்தில் கைது!

தென்காசி மாவட்டத்தில் ஒரே நாளில் நான்கு பேர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர். 
10:51 AM Jun 06, 2025 IST | Web Editor
தென்காசி மாவட்டத்தில் ஒரே நாளில் நான்கு பேர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர். 
Advertisement

தென்காசியில் ஒரே நாளில் 4 பேர் வெவ்வேறு குற்றங்களுக்காக குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர். தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் பகுதியைச் சேர்ந்த மாசானமுத்து என்பவர், 9 வயது சிறுமியிடம் தவறாக நடக்க முயன்றதாக கைது செய்யப்பட்டுள்ளார்.

Advertisement

சொக்கம்பட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் சரித்திர பதிவேடு குற்றவாளியான மணிகண்டன் கத்தியைக் காட்டி வழிப்பறியில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டுள்ளார். அதேபோல் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட மேலநீலிதநல்லூர் பகுதியைச் சேர்ந்த மகேந்திர குமார் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்

மேலும் ஆலங்குளம் அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கோயில் திருவிழாவில் 10 வயது சிறுமியிடம் தவறாக நடக்க முயன்ற சுரேஷ் கைது செய்யப்பட்டார். இவர்கள் நால்வரும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பரிந்துரையின் பேரில், மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் உத்தரவின் பேரில், குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

Tags :
Arrestgoondas actTenkasi
Advertisement
Next Article