Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

கஞ்சா விற்பனை செய்த கல்லூரி மாணவர்கள் 4 பேர் கைது!

நாகர்கோவிலில் கஞ்சா விற்பனை செய்த 4 கல்லூரி மாணவர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.
04:06 PM Apr 23, 2025 IST | Web Editor
Advertisement

கன்னியாகுமரி மாவட்டத்தில் கஞ்சா விற்பனை அதிகரித்துள்ள நிலையில் தற்போது கல்லூரி மாணவர்களிடையே போதை பொருள் விற்பனை பரவி வருகிறது.

Advertisement

இதனை முழுமையாக தடுத்து நிறுத்த கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறார். அந்த வகையில் நேற்று கஞ்சா விற்பனை செய்த 4 கல்லூரி மாணவர்களை தனிப்படை போலீசாரால் கைது செய்தனர்.

பின்னர் கைது செய்த கல்லூரி மாணவர்களை கோட்டார் காவல் நிலையம் அழைத்து சென்று போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அவர்களிடமிருந்து 527 கிராம் கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.

மேலும் இச்சம்பவத்தில், கஞ்சா விற்பனை செய்த பூதபாண்டி பகுதியை சேர்ந்த தங்கராஜ், பிரதீப், பால் குளத்தை சேர்ந்த அனு (18), அபினேஷ் (19) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

Tags :
arrestedCannabisCollege studentsdistrictKannyakumariSelling
Advertisement
Next Article