For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

இலங்கை கடற்படை தொடர்ந்து அட்டூழியம்! எல்லை தாண்டி மீன்பிடித்ததாக 32 தமிழக மீனவர்கள் கைது!

07:10 PM Aug 08, 2024 IST | Web Editor
இலங்கை கடற்படை தொடர்ந்து அட்டூழியம்  எல்லை தாண்டி மீன்பிடித்ததாக 32 தமிழக மீனவர்கள் கைது
Advertisement

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக பாம்பனை சேர்ந்த 4 நாட்டுபடகுகளுடன் 32 மீனவர்கள் இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். 

Advertisement

தமிழக மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லும் போது எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர், தமிழக மீனவர்களை கைது செய்வது தொடர்கதையாகி வருகிறது.  அதோடு மீனவர்களின் படகுகளையும் இலங்கை கடற்படையினர் பறிமுதல் செய்து விடுவர்.  கைது செய்யப்பட்ட மீனவர்கள் சிறையிலும் அடைக்கப்படுவர். இது தொடர் நிகழ்வாகவே நடந்து வருகிறது.

இந்த சூழலில், ராமநாதபுரம் மாவட்டம் பாம்பனைச் சேர்ந்த 32 மீனவர்கள் 4 நாட்டு படகுகளில் மீன்பிடிக்கச் சென்றனர். இவர்கள் எல்லைத் தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி இலங்கை கடற்படையினர் 32 மீனவர்களை கச்சத் தீவு அருகே கைது செய்தனர்.  அவர்களின் 4 நாட்டு படகுகளையும் பறிமுதல் செய்தனர்.

கைது செய்யப்பட்ட 32 மீனவர்களையும் இலங்கை கடற்படை கற்பிட்டி கடற்படை முகாமிற்கு விசாரணைக்காக அழைத்துச் சென்றனர். இதன்பிறகு கைது செய்யப்பட்ட மீனவர்கள் இன்று அல்லது நாளை காலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர்.

Tags :
Advertisement