For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

போலி அடையாள அட்டையை பயன்படுத்தி நாடாளுமன்றத்துக்குள் நுழைய முயன்ற 3 பேர் கைது!

10:35 AM Jun 07, 2024 IST | Web Editor
போலி அடையாள அட்டையை பயன்படுத்தி நாடாளுமன்றத்துக்குள் நுழைய முயன்ற 3 பேர் கைது
Advertisement

போலி அடையாள அட்டையை பயன்படுத்தி நாடாளுமன்றத்துக்குள் நுழைய முயன்ற 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

Advertisement

நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடத்தப்பட்ட மக்களவை தேர்தலில் பதிவான வாக்குகள் ஜூன் 4ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன.  இதில் பாஜக தலைமை வகிக்கும் தேசிய ஜனநாயக கூட்டணி 293  இடங்களிலும்,  காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணி 234 இடங்களிலும்,  மற்றவை 17 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. இதில் பாஜக 240 தொகுதிகளிலும், காங்கிரஸ் 99 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளன. நாடாளுமன்ற மக்களவை தேர்தல் முடிவில் எந்த கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை.

இதனால் தொங்கு நாடாளுமன்றம் அமைந்துள்ளது.  எனவே,  240 தொகுதிகளில் வென்று தனிப்பெரும் கட்சியாக உள்ள பாஜக மத்தியில் கூட்டணி ஆட்சியை அமைக்க முடிவு செய்துள்ளது.  இதுதொடர்பாக நேற்று முன்தினம் (ஜூன் 5) டெல்லியில் உள்ள பிரதமர் மோடியின் இல்லத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி தலைவர்களின் ஆலோசனை கூட்டம் நடந்தது.  இதில் மோடி தலைமையில் பாஜக கூட்டணி ஆட்சி அமைப்பதற்கான ஆதரவு கடிதங்களை கூட்டணி கட்சி தலைவர்கள் வழங்கினர்.

இதனையடுத்து டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நாடாளுமன்ற மைய மண்டபத்தில் இன்று (ஜூன் 7) ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது.  இதில் பாஜக, தெலுங்கு தேசம்,  ஜேடியு,  ஜேடிஎஸ் உட்பட கூட்டணியில் உள்ள அனைத்து கட்சிகளின் எம்பிக்களும் கலந்து கொள்ள உள்ளனர்.

கூட்டத்தில் மீண்டும் மத்தியில் நரேந்திர மோடி தலைமையில் ஆட்சியமைப்பது பற்றி ஆலோசிக்கப்படுகிறது.  இந்த நிலையில்,  பணியாட்கள் போன்று போலி அடையாள அட்டையை பயன்படுத்தி நாடாளுமன்றத்துக்குள் நுழைய முயன்ற 3 பேர் இன்று கைது செய்யப்பட்டனர்.

Tags :
Advertisement