For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

சென்னையின் 3 முக்கிய இடங்களில் அமலாக்கத்துறையினர் அதிரடி சோதனை!

09:44 AM Dec 28, 2023 IST | Web Editor
சென்னையின் 3 முக்கிய இடங்களில் அமலாக்கத்துறையினர் அதிரடி சோதனை
Advertisement

சென்னையின் மூன்று முக்கிய இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். 

Advertisement

சென்னையில் உள்ள ஆழ்வார்பேட்டை, கொளத்தூர் மற்றும் பெசன்ட் நகர் உள்ளிட்ட பகுதிகளில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று(டிச.28) சோதனை நடத்தி வருகின்றனர்.

சென்னை ஆழ்வார்பேட்டை வீனஸ் காலனியில் உள்ள கணேஷ் என்பவர் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். ஷேர் மார்க்கெட் பங்குதாரரான இவர், சில மாதங்களுக்கு முன்பே அமெரிக்காவில் இருந்து சென்னை வந்துள்ளார்.

இதைப்போல, கொளத்தூர் சிவ பார்வதி நகரில் உள்ள முத்து என்பவர் வீட்டிலும் பெசன்ட் நகர் கலாஷேத்ரா காலனியில் உள்ள பிரியா என்பவரது வீட்டிலும்  அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

இதையும் படியுங்கள்: தேமுதிக தலைவர் ‘கேப்டன்’ விஜயகாந்த் காலமானார்!

இந்த சோதனையின் விவரங்கள் மற்றும்  கைப்பற்றப்பட்டுள்ள ஆவணங்கள் குறித்து அடுத்தடுத்து தகவல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags :
Advertisement