For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

3 குற்றவியல் சட்ட மசோதாக்களுக்கு குடியரசு தலைவர் ஒப்புதல் அளித்ததையடுத்து அவை சட்டமாகின!

08:50 PM Dec 25, 2023 IST | Web Editor
3 குற்றவியல் சட்ட மசோதாக்களுக்கு குடியரசு தலைவர் ஒப்புதல் அளித்ததையடுத்து அவை சட்டமாகின
Advertisement

நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட  3 குற்றவியல் சட்ட மசோக்களுக்கு குடியரசு தலைவர் ஒப்புதல் அளித்ததையடுத்து அவை சட்டமாகியுள்ளன. 

Advertisement

இந்திய தண்டனைச் சட்டம் 1860, குற்றவியல் நடைமுறைச் சட்டம் 1898, இந்திய சாட்சிய சட்டம் 1872 ஆகிய ஆங்கிலேயா் ஆட்சிக் கால சட்டங்களுக்கு மாற்றாக ‘பாரதிய நியாய சன்ஹிதா’, ‘பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா’, ‘பாரதிய சாட்சிய அதினியம்’ ஆகிய 3 புதிய மசோதாக்களை மத்திய அரசு சில திருத்தங்களுடன் கடந்த 12-ஆம் தேதி மக்களவையில் மீண்டும் தாக்கல் செய்தது.

குற்றவியல் சட்டங்களுக்கு மாற்றாக மத்திய அரசு கொண்டுவந்த 3 புதிய மசோதாக்களுக்கு குரல் வாக்கெடுப்பு மூலம் மக்களவையில் கடந்த புதன்கிழமை(டிச.20) ஒப்புதல் அளிக்கப்பட்டது. இந்த நிலையில், நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட 3 புதிய குற்றவியல் சட்ட மசோதாக்களுக்கு குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு ஒப்புதல் அளித்துள்ளார்.குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு ஒப்புதல் அளித்ததைத் தொடர்ந்து 3 புதிய மசோதாக்களும் சட்டமாகி உள்ளது.

Tags :
Advertisement