திமுகவில் மேலும் 2 அணிகள் உருவாக்கம்... பொதுக்குழுவில் அறிவிப்பு!
திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் மதுரையில் பொதுக்குழு கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. முன்னதாக, இன்று காலை சுற்றுலா மாளிகையில் இருந்து பொதுக்குழு நடைபெறும் உத்தங்குடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புறப்பட்டார். கூட்டத்திற்கு செல்வதற்கு முன்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புதூர், மூன்றுமாவடி, மாட்டுத்தாவணி, உத்தங்குடி பகுதியில் சாலைப்பேரணியாக சென்றார்.
இதையும் படியுங்கள் : “அஞ்சலை அம்மாள் ஆற்றிய அரும்பணிகளைப் போற்றிப் பெருமை கொள்வோம்” – தவெக தலைவர் விஜய் அறிக்கை!
சென்னை அண்ணா அறிவாலயம் போன்ற முகப்பு தோற்றத்துடன் பொதுக்குழு நடைபெறும் அரங்கின் நுழைவு வாயில் அமைக்கப்பட்டுள்ளது. அரங்கின் நுழைவு வாயில் முன்பு அமைக்கப்பட்டிருந்த 100 அடி உயர கொடிக்கம்பத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திமுக கொடியை ஏற்றி வைத்து பொதுக்குழுவை தொடங்கி வைத்தார். பொதுக்குழுவில் அமைச்சர்கள், திமுக எம்.பி.க்கள் என பலரும் பேசுகின்றனர்.
இறுதியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசுகிறார். மதியத்திற்கு பிறகு கருத்தரங்கு உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளும் நடைபெறுகின்றன. இந்த பொதுக்குழுவில் திமுகவில் மாற்றுத் திறனாளிகளுக்கான புதிய சார்பு அணி உருவாக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆசிரியர்கள் மற்றும் பேராசிரியர்களை கொண்ட கல்வியாளர் அணி என்ற புதிய அணியும் உருவாக்கப்பட்டுள்ளது. திமுகவில் ஏற்கெனவே 23 அணிகள் இருந்த நிலையில் தற்போது மேலும் 2 அணிகள் உருவாக்கப்பட்டுள்ளது.