For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

ஹத்ராஸ் கூட்ட நெரிசலில் சிக்கி 121 பேர் உயிரிழந்த சம்பவம்! முக்கிய குற்றவாளிகள் தப்பிய நிலையில் சேவகர்கள் 6 பேர் கைது!

04:47 PM Jul 04, 2024 IST | Web Editor
ஹத்ராஸ் கூட்ட நெரிசலில் சிக்கி 121 பேர் உயிரிழந்த சம்பவம்  முக்கிய குற்றவாளிகள் தப்பிய நிலையில் சேவகர்கள் 6 பேர் கைது
Advertisement

உத்தரப் பிரதேச மாநிலம் ஹத்ராஸ் பகுதியில் நடைபெற்ற ஆன்மிக சொற்பொழிவு நிகழ்வின் கூட்ட நெரிசலில் சிக்கி 121 பேர் உயிரிழந்த சம்பவத்தில் முக்கிய குற்றவாளிகள் தப்பிய நிலையில் சேவகர்களாக பணியாற்றிய 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Advertisement

உத்தரப் பிரதேச மாநிலம் ஹத்ராஸ் மாவட்டத்தில் உள்ள புல்ராய் கிராமத்தில் போலே பாபா என்ற சாமியார் நடத்திய இந்து மத ஆன்மிக சொற்பொழிவு நிகழ்வின் கூட்ட நெரிசலில் சிக்கி இதுவரை 121 பேர் உயிரிழந்துள்ளனர். 80,000 மக்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்ட நிலையில் 2.5 லட்சம் பேரை சட்டவிரோதமாக நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் அனுமதித்துள்ளனர்.

நிகழ்ச்சி முடிந்ததும் ஒரு சாரார் வெளியேறும் வாயிலை நோக்கி முன்னேறிய நிலையில் மற்றொரு சாரார் போலே பாபாவின் காலடி மண்ணை எடுப்பதற்காக எதிர்புறமாக முன்னேறியதால் இந்த கூட்ட நெரிசல் ஏற்பட்டுள்ளது என்று தெரியவந்துள்ளது. இந்த விவகாரத்தில் நிகழ்ச்சி ஏற்பாட்டு குழுவை சேர்ந்த 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 4 ஆண்கள், 2 பெண்கள் என 6 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கைது செய்யப்பட்டவர்கள் நிகழ்ச்சி ஏற்பாட்டு குழு, சேவகர்களாக பணியாற்றியவர்கள் என தகவல் வெளியாகியுள்ளது.

முக்கிய குற்றவாளியான பிரகாஷ் மதுகரை பிடிப்பவர்களுக்கு ரூ.1 லட்சம் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. பிரகாஷ் மதுகரைக்கு எதிராக ஜாமினில் வெளிவர முடியாத பிடிவாரண்ட் பிறப்பிக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. மேலும், கூட்ட நெரிசல் ஏற்பட்டபோது, தற்போது கைது செய்யப்பட்டுள்ள 6 பேரும் அந்த இடத்தை விட்டு தப்பியோடியதாக கூறப்படுகிறது.

Tags :
Advertisement