Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை லண்டன் பயணம் எதிரொலி! கட்சிப்பணிகளை கவனிக்க ஒருங்கிணைப்பு குழு அமைப்பு!

02:07 PM Aug 30, 2024 IST | Web Editor
Advertisement

பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை லண்டன் சென்ற நிலையில், தமிழ்நாட்டில் கட்சிப் பணிகளை கவனிக்க எச்.ராஜா தலைமையில் பாஜக ஒருங்கிணைப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது.

Advertisement

அரசியலுக்கு தற்காலிக ஓய்வு கொடுத்து விட்டு, அண்ணாமலை லண்டனில் படிக்க சென்று உள்ளார். லண்டனில் உள்ள ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் சர்வதேச அரசியல் படிப்புக்காக பல்வேறு நாடுகளை சேர்ந்த 40 பேரை தேர்வு செய்துள்ளது. இதில் இந்தியாவில் இருந்து தேர்வு செய்யப்பட்டுள்ள 12 பேரில் அண்ணாமலையும் ஒருவர். அங்கு தங்கி படிப்பவர்களுக்கான செலவை பல்கலைக்கழகமே ஏற்றுக்கொண்டுள்ளது. இதற்காக அண்ணாமலை லண்டன் சென்றுள்ளார். 3 மாதங்கள் லண்டனில் தங்கி படிக்கும் அண்ணாமலை, வருகிற நவம்பர் மாத இறுதியில் படிப்பை முடித்து சென்னை திரும்ப உள்ளார்.

அண்ணாமலை வெளிநாடு சென்ற நிலையில், தமிழகத்தில் பாஜக-வின் செயல்பாடுகளை ஒருங்கிணைப்பதற்காக பாஜக தேசிய தலைமை, தமிழ்நாட்டில் 6 பேர் கொண்ட ஒருங்கிணைப்பு குழுவை அமைத்துள்ளது. தமிழ்நாடு பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா தலைமையில் செயல்படும் இந்த ஒருங்கிணைப்பு குழுவில் பாஜக மாநில துணைத்தலைவர்கள் சக்ரவர்த்தி, கனகசபாபதி, மாநில பொதுச்செயலாளர்கள் முருகானந்தம், ராம.சீனிவாசன், பொருளாளர் ஆர்.எஸ்.சேகர் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். அண்ணாமலை தமிழகம் திரும்பும் வரை இந்த குழுவினர் கட்சி செயல்பாடுகளை ஒருங்கிணைப்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
AnnamalaiBJPhrajanews7 tamilTamilNadu
Advertisement
Next Article