Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

#YuvanShankarRaja வீட்டு வாடகை விவகாரம்: விசாரணையை தொடங்கிய சென்னை காவல்துறை!

03:59 PM Aug 19, 2024 IST | Web Editor
Advertisement

பிரபல இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவின் வீட்டு வாடகை விவகாரம் தொடர்பாக சென்னை காவல்துறை விசாரணையை துவங்கியுள்ளது.

Advertisement

சென்னை நுங்கம்பாக்கம் லேக் ஏரியாவில், ஜமீலா என்பவருக்குச் சொந்தமான வீட்டில் யுவன் சங்கர் ராஜா வாடகைக்கு குடியிருந்து வந்தார். ஜமீலாவின் சகோதரர் முகமது ஜாவித் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அந்த புகாரில், “ரூ.20 லட்சம் வாடகை பாக்கியை வழங்காமல் யுவன் சங்கர் ராஜா இழுத்தடித்து வந்தார். அவரை போனில் தொடர்பு கொண்டாலும் பதில் அளிக்கவில்லை. முறைப்படி எந்த தகவலும் அளிக்காமல் யுவன் சங்கர் ராஜா திடீரென வீட்டைக் காலி செய்து விட்டார். இந்த தகவல் அருகில் வசிப்பவர்கள் மூலம் தான் எங்களுக்கு தெரியவந்தது.

வீட்டில் உள்ள பொருட்களை யுவன் சங்கர் ராஜா சேதப்படுத்தியுள்ளார். வாடகை பாக்கியை வழங்காததாலும், சேதத்துக்கு நஷ்ட ஈடு தராததாலும் யுவன் சங்கர் ராஜா மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என முகமது ஜாவித் தனது புகாரில் தெரிவித்துள்ளார்.

இந்த புகார் தொடர்பான போலீசார் விசாரணையில் யுவனிற்கு வாடகை பாக்கி இருப்பது தெரிய வந்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் மொத்தமாக வாடகையை செலுத்தி வந்த நிலையில், நடிகர் விஜய் நடித்து வெளியாகவுள்ள ’The GOAT' பட ஆடியோ வெளியான பிறகு வாடகையை தருவதாக வீட்டு உரிமையாளரிடம் உறுதியளித்திருப்பது தெரியவந்தது. இதனிடையே வீட்டை காலி செய்ய முயன்றதால் யுவன் சங்கர் ராஜா மீது வீட்டு உரிமையாளர் புகார் அளித்ததுள்ளார்.

இந்நிலையில், யுவன் சங்கர் ராஜா சட்டரீதியாக இந்த புகாரை எதிர்கொள்ளப் போவதாக வழக்கறிஞர் நோட்டீஸ் அளித்துள்ளார். எனவே யுவன் தரப்பு விளக்கத்தை காவல்துறையினர் கேட்க முடிவு செய்துள்ளனர். இந்த விவகாரம் சினிமா வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags :
music directorNews7Tamilnews7TamilUpdatesnungambakkamYSR
Advertisement
Next Article