For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

யுவன் சங்கர் ராஜா காருக்கு பூட்டு - சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு!

08:02 AM Jan 27, 2024 IST | Jeni
யுவன் சங்கர் ராஜா காருக்கு பூட்டு   சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு
Advertisement

சென்னை விமான நிலையத்தில் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா, இயக்குநர் வெங்கட் பிரபு ஆகியோரின் கார்களுக்கு பூட்டு போடப்பட்டதால் சிறிது நேரம் அங்கு பரபரப்பு நிலவியது.

Advertisement

பிரபல இசையமைப்பாளர் இளையராஜாவின் மகளும், பாடகியுமான பவதாரிணி உடல்நலக் குறைவால் நேற்று முன்தினம் காலமானார். ஆயுர்வேத சிகிச்சை பெற இலங்கை சென்றிருந்த நிலையில், உடல்நலக் குறைவு ஏற்பட்டு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இதையடுத்து அவரது உடல், இலங்கையிலிருந்து நேற்று விமானம் மூலம் சென்னை கொண்டுவரப்பட்டது.

இலங்கையிலிருந்து தனது சகோதரி பவதாரிணியின் உடலை கொண்டுவருவதற்காக யுவன் சங்கர் ராஜா சென்றிருந்தார். நேற்று சென்னை விமான நிலையம் திரும்பிய அவரை அழைத்துச் செல்ல அவரது கார் தயார் நிலையில் இருந்தது. அப்போது அவருடைய காரை இயக்க முடியாமல் ஓட்டுநர் திணற, காரின் டயர் லாக் செய்யப்பட்டிருந்தது கண்டறியப்பட்டது.

இதையும் படியுங்கள் : அனிமே ஸ்டுடியோவுக்கு தீ வைத்த நபர் - மரண தண்டனை விதித்து ஜப்பான் நீதிமன்றம் உத்தரவு..!

அதோபோல் பவதாரிணியின் உடலை பெற வந்த இயக்குநர் வெங்கட் பிரபுவின் காரும் பூட்டு போடப்பட்டிருந்தது. இதையடுத்து விமான நிலைய அதிகாரிகளிடம் இதுகுறித்து தகவல் தெரிவித்ததையடுத்து, இருவருடைய காரில் இருந்த பூட்டும் அகற்றப்பட்டது. இந்த சம்பவத்தால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

Tags :
Advertisement