For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

இளம் KPOP பாடகி திடீர் மரணம்!

06:03 PM Nov 10, 2023 IST | Web Editor
இளம் kpop பாடகி திடீர் மரணம்
Advertisement

தென் கொரிய பாடகி கிம் நா ஹீ திடீரென உயிரிழந்த சம்பவம்  ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Advertisement

நா ஹீ  என்று ரசிகர்களால் அழைக்கப்படும் தென் கொரிய பாடகி கிம் நா ஹீ கடந்த நவ. 8ம் தேதி உயிரிழந்தார். அவரது மரணத்திற்கான காரணம் குறித்த தகவல் ஏதும் வெளியாகவில்லை. நா ஹீயின் இறுதிச் சடங்கு இன்று(நவ. 10) கியோங்கி-டோ மாகாணத்தின் பியோங்டேக்கில் நடைபெறுவதாக தென் கொரிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

நா ஹீ, கடந்த 2019ம் ஆண்டு வெளியான  "ப்ளூ சிட்டி" என்ற பாடலின் மூலம் கே-பாப் உலகத்தில் பாடகியாக அறிமுகமானார். சமீபத்தில் இவர் பாடிய 'ரோஸ்' என்ற பாடல் வெளியானது. இந்த பாடல் வெளியான போது, தனது ரசிகர்களுக்காக இப்பாடலை  அர்ப்பணிப்பதாக நா ஹீ தெரிவித்திருந்தார்.

மேலும் அவர்,  “எனது பாடல்களை நான் எப்போதும் பூக்கள் போல நினைக்கிறேன். என்னுடைய மலர் போன்ற மெல்லிசைகளை விரும்பும் ரசிகர்கள் அனைவருக்கும் ஒரு இதயப்பூர்வமான கதையை இப்பாடல் மூலம் விவரிக்க விரும்புகிறேன்” என கூறியிருந்தார்.

இந்நிலையில் அவரது திடீர் மரணம் ரசிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 3 நாட்களுக்கு முன்பு நா ஹீ பகிர்ந்த இன்ஸ்டாகிராம் பதிவே அவரது இறுதி பதிவாக மாறியுள்ளது. அப்பதிவில் நா ஹீ-இன் ரசிகர்கள் தங்களது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர்.

Tags :
Advertisement