For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

10-ம் தேதி வரை தமிழ்நாட்டில் கனமழைக்கான மஞ்சள் அலர்ட்! - வானிலை ஆய்வு மையம் ...

10:07 AM Nov 06, 2023 IST | Web Editor
10 ம் தேதி வரை தமிழ்நாட்டில் கனமழைக்கான மஞ்சள் அலர்ட்    வானிலை ஆய்வு  மையம்
Advertisement

வளிமண்டல சுழற்சி மற்றும் கிழக்கு திசை காற்றின் வேகம் காரணமாக கனமழை நீடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. சென்னை மாநகரைவிட, புறநகர் பகுதிகளில் கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது.

நேற்று காலை வரையிலான 24 மணி நேரத்தில் தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் மிதமான மழையும், சில இடங்களில் கனமழையும் பெய்துள்ளது. வரும் நாட்களிலும் கனமழை தொடர வாய்ப்பு உள்ளது.

இதனை தொடர்ந்து, தமிழகத்தில் 12 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.  அதன்படி, நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், தர்மபுரி, சேலம் நாமக்கல், கருர், தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. மேலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவலின் படி, வட தமிழகம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் 5.8 கிலோமீட்டர் வரை நீடிக்கும் சூறாவளி சுழற்சியானது உயரத்துடன் தென்மேற்கு கடல் மட்டத்தில் நீடிக்கிறது. இது அடுத்த 24 மணி நேரத்தில் மேற்கு-வடமேற்கு திசையில் தென்கிழக்கு மற்றும் அதை ஒட்டிய கிழக்கு மத்திய அரபிக்கடலை நோக்கி நகரக்கூடும். அதன் தாக்கத்தால், வரும் நவம்பர் 8 ஆம் தேதியன்று கிழக்கு மத்திய அரபிக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளது.

இதன் காரணமாக வரும் நவம்பர் 10 ஆம் தேதி வரை தமிழகத்திற்கு கனமழைக்கான மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இன்று கேரள பகுதிகளுக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ள நிலையில், நவம்பர் 10 ஆம் தேதி வரை தமிழகம் மற்றும் கேரளா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களுக்கு கனமழைக்கான மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

Advertisement