For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

6 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை - வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!

தமிழ்நாட்டில் 6 மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு மையம் மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது.
07:05 AM Oct 03, 2025 IST | Web Editor
தமிழ்நாட்டில் 6 மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு மையம் மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது.
6 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை   வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு
Advertisement

மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் கடந்த மாதம் 30ம் தேதி நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி, கடந்த 1-ம் தேதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று, அதே பகுதிகளில் நிலவுகிறது. இது மேலும், வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, அடுத்த 12 மணி நேரத்தில் அதே பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும்.

Advertisement

இது மேலும், வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, தெற்கு ஒடிசா வடக்கு ஆந்திர கடலோரப்பகுதிகளில் இன்று (வெள்ளிக்கிழமை) காலை கரையை கடக்கக்கூடும். இதன் காரணமாக நேற்று வடதமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், தென்தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.

இந்த நிலையில் இன்று செங்கல்பட்டு, திருவண்ணாமலை, காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, சேலம் ஆகிய 6 மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு மையம் மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Tags :
Advertisement