Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

பாலியல் வழக்கில் சிக்கிய யாஷ் தயாளுக்கு தடை - உத்தரப் பிரதேச T20 தொடர் நிர்வாகம் அதிரடி!

பாலியல் வன்கொடுமை வழக்கில் சிக்கிய கிரிக்கெட் வீரர் யாஷ் தயாள் உத்தர பிரதேச மாநில T20 தொடரில் பங்கேற்கத் தடை விதித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
07:02 PM Aug 11, 2025 IST | Web Editor
பாலியல் வன்கொடுமை வழக்கில் சிக்கிய கிரிக்கெட் வீரர் யாஷ் தயாள் உத்தர பிரதேச மாநில T20 தொடரில் பங்கேற்கத் தடை விதித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
Advertisement

 

Advertisement

இந்திய கிரிக்கெட் வீரர் யாஷ் தயாள், பாலியல் வன்கொடுமை வழக்கில் சிக்கியதால், உத்தரப் பிரதேச மாநில T20 கிரிக்கெட் தொடரில் அவர் பங்கேற்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

சமீபத்தில், இளம் கிரிக்கெட் வீராங்கனை ஒருவரைப் பாலியல் வன்கொடுமை செய்ததாக யாஷ் தயாள் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஏற்கனவே, மற்றொரு பெண்ணும் அவர் மீது திருமண மோசடி புகார் அளித்திருந்தார். இந்தச் சூழ்நிலையில், எதிர்வரும் உத்தரப் பிரதேச T20 தொடரில் அவர் விளையாடுவது குறித்து பல கேள்விகள் எழுந்தன.

இந்நிலையில், உத்தரப் பிரதேச கிரிக்கெட் சங்கம் (UPCA), யாஷ் தயாளுக்கு அந்தத் தொடரில் விளையாடத் தடை விதித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தத் தொடருக்கான ஏலத்தில் கோரக்பூர் லயன்ஸ் அணி, அவரை ரூ.7 லட்சம் கொடுத்து வாங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.

ஆனால், தற்போது அவர் மீதான குற்றச்சாட்டுகளின் தீவிரத்தைக் கருத்தில் கொண்டு, இந்த முடிவை கிரிக்கெட் வாரியம் எடுத்திருப்பதாகக் கூறப்படுகிறது.

இந்த முடிவு, விளையாட்டு வீரர்கள் மீதான ஒழுக்கவியல் மற்றும் நடத்தை விதிகளைப் பின்பற்றுவதன் அவசியத்தை வலியுறுத்துவதாக அமைந்துள்ளது. இந்தச் சம்பவம், யாஷ் தயாளின் கிரிக்கெட் வாழ்க்கைக்கும் ஒரு பின்னடைவாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags :
banCricketpocsoUPT20LeagueYashDayal
Advertisement
Next Article