’கிங்டம்’ திரைப்படம் வெளியாகியுள்ள திரையரங்கை நாதகவினர் முற்றுகை!
இயக்குநர் கவுதம் தின்னனூரி இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா நடிப்பில் ஜூலை 31ல் திரையரங்கில் வெளியான படம் ‘கிங்டம்’. இப்படத்தில் விஜய் தேவரகொண்டா பாக்யஸ்ரீ போர்ஸ், சத்யதேவ் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். கிங்டம்’ தற்போது வரை 80 கோடி வரை வசூலித்துள்ளது. மேலும் இந்த திரைப்படத்தின் கதை இலங்கையை அடிப்படியாக கொண்டு அமைக்கப்பட்டுள்ளது.
முன்னதாக இப்படத்தில் இலங்கை தமிழர்களை மிகத் தவறாக சித்தரிக்கும் வகையில் காட்சியமைப்புகள் இடம் பெற்றிருப்பதாக நாம் தமிழர் கட்சி மாநில ஒருங்கிணைப்பாளர் சீமான் கடும் கண்டனம் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் இலங்கை தமிழர்களை மோசமக சித்தரிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து ராமநாதபுரத்தில் கிங்டம் திரைப்படம் வெளியாகியுள்ள ஜெகன் திரையரங்கை 50க்கும் மேற்பட்ட நாம் தமிழர் கட்சியினர் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
பின்னர் திரையரங்கில் வைக்கப்பட்டிருந்த கிங்டம் திரைப்படத்தின் பிளக்ஸ் பேனரை அகற்ற வேண்டும் என அவர்கள் திரையரங்கு நிர்வாகத்திடம் முறையிட்டனர். ஆனால் திரையரங்கு நிர்வாகம் பிளக்ஸ் பேனரை அகற்ற மறுத்ததால் நாதகவினர் திரையரங்கத்திற்கு முன் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனிடையே நாம் தமிழர் கட்சியை சேர்ந்த சிலர் அந்த பிளக்ஸ் பேனரை கிழிக்க
முயன்றதால் திரையரங்கு நிர்வாகம் பிளக்ஸ் பேனரை அகற்றுவதாக தெரிவித்தது. இதனையடுத்து நாதகவினர் சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டனர்.இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த நிலையில் முற்றுகை போராட்டத்தில்ஈடுபட்ட 50 க்கும் மேற்பட்ட நாம் தமிழர் கட்சியினரை போலீசார் கைது செய்து செய்தனர்.