#WPL2025 | பெங்களூரு அணியை வீழ்த்தி யுபி வாரியர்ஸ் அணி த்ரில் வெற்றி!
5 அணிகள் பங்கேற்றுள்ள நடப்பாண்டிற்கான (wpl) மகளிர் பிரீமியர் லீக் (பிப்.14) தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் நேற்றைய ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி, யுபி வாரியர்ஸ் அணியை எதிர்கொண்டது. இப்போட்டிக்கான டாஸ் வென்ற யுபி வாரியர்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 180 ரன்கள் சேர்த்தது. இதில் அதிகபட்சமாக எல்லிஸ் பெர்ரி 90 ரன்கள் குவித்தார். பின்னர் 181 ரன்கள் எடுத்தால் வெற்றி இலக்குடன் யுபி வாரியர்ஸ் அணி களமிறங்கியது. யுபி வாரியர்ஸ் அணியின் வீராங்களைகள் ரன்களை வாரி குவித்தனர்.
இந்நிலையில் 20 ஓவர்கள் முடிவில் இரு அணிகளும் 180 ரன்கள் எடுத்ததால் அந்த போட்டி டையில் முடிந்தது. அதன் பின் சூப்பர் ஓவர் வழங்கப்பட்டது. அதில் யுபி வாரியர்ஸ் 8 ரன்கள் எடுத்தனர். அடுத்து களமிறங்கிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு 4 ரன்களே எடுத்தனர். இதன் மூலம் 4 ரன்கள் வித்தியாசத்தில் யுபி வாரியர்ஸ் அணி த்ரில் வெற்றி பெற்றனர். ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி மீண்டும் 2வது தோல்வியை சந்தித்துள்ளது.