For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

சென்னை மெரினா மற்றும் பெசன்ட் நகர் கடற்கரையில் நேரலை செய்யப்படும் உலகக்கோப்பை இறுதிப் போட்டி!!!

07:49 AM Nov 19, 2023 IST | Web Editor
சென்னை மெரினா மற்றும் பெசன்ட் நகர் கடற்கரையில் நேரலை செய்யப்படும்  உலகக்கோப்பை இறுதிப் போட்டி
Advertisement

சென்னை மெரினா மற்றும் பெசன்ட் நகர் கடற்கரையில் உலகக்கோப்பை இறுதிப் போட்டி நேரலை செய்யப்பட உள்ளது.

Advertisement

இந்தியா  தனது முதல் உலகக்கோப்பை வெற்றியை கபில்தேவ் தலைமையில் ஜீன் 25 ,1983 வென்றது. இந்தியாவின் 2- வது உலக கோப்பையை தோனி தலைமையில் 2011 - ல் வெற்றி பெற்றது . தற்போது மூன்றாம் உலகக் கோப்பை வெற்றியை நோக்கி இந்திய அணி அரையிறுதி போட்டியில் வெற்றி வாகை சூடி இறுதி போட்டியை இன்று ஆஸ்திரேலிய அணியுடன் எதிர்கொள்கிறது.

உலகக்கோப்பை வரலாற்றில் ஆஸ்திரேலிய அணி ( 1987, 1999, 2003, 2007, 2015) ‌என 5 முறை உலகக்கோப்பையை வென்றுள்ளது. இந்தியா vs ஆஸ்திரேலியா இதுவரை 13 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் ஆஸ்திரேலியா 8 முறை வெற்றி பெற்றுள்ளது. இந்தியா 5 முறை இந்தியா வென்றுள்ளது குறிப்பிடதக்கது.

முன்னதாக நடைப்பெற்ற அரையிறுதி ஆட்டத்தில் இந்திய அணி நியூசிலாந்து ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்காவையும் வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளன. இந்த நிலையில் இன்று நவம்பர்  19 தேதி இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணி  மோதும் உலகக்கோப்பை இறுதிப் போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற உள்ளது.

இந்தியா 9 பேட்டிகளில் வெற்றி பெற்றுள்ள நிலையில் ,18 புள்ளிகளைப் பெற்று புள்ளி பட்டியலில் முதலிடம் வகிக்கிறது. ஆஸ்திரேலியா 9 போட்டியில் 7 -போட்டிகளில் வெற்றி பெற்று 14 புள்ளிகளைக் கொண்டுள்ளது.

இன்று நடக்கவிருக்கும் உலகக்கோப்பை இறுதிப் போட்டிகாக ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இந்நிலையில் சென்னை மெரினா மற்றும் பெசன்ட் நகர் கடற்கரையில் உலகக்கோப்பை இறுதிப் போட்டி நேரலை செய்யப்பட உள்ளது. தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த நேரலையை கண்டுகளிக்க கிரிக்கெட் ரசிகர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

Advertisement