For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

மகளிர் உலகக்கோப்பை | தென்னாப்பிரிக்காவை வீழ்த்தியது இங்கிலாந்து!

தென்னாப்பிரிக்காவை 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி இங்கிலாந்து அபார வெற்றிபெற்றது.
09:31 AM Oct 04, 2025 IST | Web Editor
தென்னாப்பிரிக்காவை 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி இங்கிலாந்து அபார வெற்றிபெற்றது.
மகளிர் உலகக்கோப்பை   தென்னாப்பிரிக்காவை வீழ்த்தியது இங்கிலாந்து
Advertisement

மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் இந்தியா, இலங்கையில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற 4வது லீக் ஆட்டத்தில் தென்னாப்பிரிக்கா - இலங்கை அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதனைத் தொடர்ந்து, களமிறங்கிய தென்னாப்பிரிக்க அணி வீராங்கனைகள் இங்கிலாந்தின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறினர்.

Advertisement

முடிவில் தென்னாப்பிரிக்க அணி 20.4 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 69 ரன்கள் மட்டுமே எடுத்தது. அந்த அணியின் சினலோ அதிகபட்சமாக 22 ரன்கள் சேர்த்தார். இங்கிலாந்து வீராங்கனை 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். பின்னர், 70 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் இங்கிலாந்து தொடக்க வீராங்கனைகளாக பியூமவுண்ட், ஏமி களமிங்கினர்.

இருவரும் சிறப்பாக ஆடி ரன்களை குவித்தனர். இறுதியில் இங்கிலாந்து 14.1 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 70 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் தென்னாப்பிரிக்காவை 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி இங்கிலாந்து அபார வெற்றி பெற்றது. பியூமவுண்ட் 18 ரன்களும், ஏமி 40 ரன்களும் எடுத்தனர்.

Tags :
Advertisement