For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

மகளிர் டி20 போட்டி - 12 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தியது தென் ஆப்பிரிக்கா!

08:03 AM Jul 06, 2024 IST | Web Editor
மகளிர் டி20 போட்டி   12 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தியது தென் ஆப்பிரிக்கா
Advertisement

மகளிர் டி20 தொடரின் முதல் போட்டியில் இந்திய அணியை 12 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென் ஆப்பிரிக்கா அபார வெற்றி பெற்றது.

Advertisement

தென் ஆப்பிரிக்க மகளிர் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 4 டெஸ்ட்,  3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.  அதன்படி, 4 டெஸ்ட் போட்டிகளிலும் இந்திய அணி வெற்றிபெற்றது. இந்த நிலையில், இந்தியா - தென் ஆப்பிரிக்கா இடையேயான முதல் டி20 கிரிக்கெட் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று நடைபெற்றது.  இதில் டாஸ் வென்ற இந்திய அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

அதன்படி, முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்க அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 189 ரன்கள் எடுத்தது.  அந்த அணியின் அதிகபட்சமாக தம்னி பிரிட்ஸ் 81 ரன்களும், மரிஸ்னி கப் 57 ரன்களும், கேப்டன் வோல்வார்ட் 33 ரன்களும் எடுத்தனர்.  இந்திய அணி தரப்பில் பூஜா, ராதா தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

இதையடுத்து, 190 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது.  இந்திய அணியின் தொடக்க வீராங்கணைகளான ஷிபாலி வர்மா 18 ரன்களிலும், ஸ்மிருதி மந்தனா 46 ரன்களிலும் வெளியேறினர்.  இவர்களை அடுத்து களமிறங்கிய  ஹேமலதா 14 ரன்களும்,  கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் 35 ரன்களும், ஜேமிமா 53 ரன்களும்  எடுத்து ஆட்டமிழந்தனர்.  20 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 177 ரன்கள் மட்டுமே சேர்த்தது.

இதன் மூலம் தென் ஆப்பிரிக்க அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் டி20 தொடரில் 1-0 என்ற புள்ளி கணக்கில் தென் ஆப்பிரிக்கா முன்னிலையில் உள்ளது.  இரு அணிகளுக்கு இடையேயான 2வது டி20 போட்டி நாளை சென்னையில் நடைபெற உள்ளது.

Tags :
Advertisement