Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

மகளிர் உலகக் கோப்பை கபடி : 2 ஆவது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்ற இந்திய அணி

இரண்டாவது மகளிர் உலகக் கோப்பை கபடி தொடரின் இறுதி போட்டியில் சீன தைபேவை வென்று இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றுள்ளது.
10:03 PM Nov 24, 2025 IST | Web Editor
இரண்டாவது மகளிர் உலகக் கோப்பை கபடி தொடரின் இறுதி போட்டியில் சீன தைபேவை வென்று இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றுள்ளது.
Advertisement

இரண்டாவது மகளிர் உலகக் கோப்பை கபடி போட்டி வங்காளதேச தலைநகர் டாக்காவில் நடைபெற்றது. 11 அணிகள் இடம்பெற்ற இந்த தொடரில் இதில் ‘ஏ’ பிரிவில் நடப்பு சாம்பியன் இந்திய அணி முதலிடமும், வங்காளதேசம் 2-வது இடமும் பெற்று அரையிறுதிக்கு முன்னேறின. அதேபோல் ‘பி’ பிரிவில் சீன தைபே முதலிடமும், ஈரான் 2-வது இடமும் பிடித்து அரையிறுதிக்கு தகுதி பெற்றன.

Advertisement

அரையிறுதியில் ஈரானை இந்தியாவும், வங்காளதேசத்தை சீன தைபே அணியும் எதிர்கொண்டன. இதில் இந்தியா மற்றும் அசீன தைபே ஆகிய அணிகள் இறுதி போட்டிக்கு முன்னேறின. இரு அணிகளுக்கு இறுதி போட்டி இன்று நடைபெற்றது. இதில் இந்திய அணி 35-28 என்ற புள்ளி கணக்கில் சீன தைபேவை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது.

இதனை தொடர்ந்து சாம்பியன் பட்டம் வென்ற  இந்திய மகளிர் கபடி அணிக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. ஏற்கனவே 2012 ஆம் ஆண்டு நடைபெற்ற மகளிர் உலகக் கோப்பை கபடி தொடரில் ஈரானை வீழ்த்தி இந்தியா அணி சாம்பியன் பட்டம் வென்றிருந்த நிலையில் தற்போது 2 ஆவது முறையாக இந்திய மகளிர் கபடி அணி சாம்பியன் பட்டத்த வென்று அசத்தியுள்ளது.

Tags :
indian teamlatestNewsSportsNewstaibe teamWomen's Kabaddi World Cup
Advertisement
Next Article