For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

தமிழ்நாட்டில் மேலும் 7.35 லட்சம் பேருக்கு மகளிர் உரிமைத்தொகை- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்!

11:16 AM Nov 10, 2023 IST | Web Editor
தமிழ்நாட்டில் மேலும் 7 35 லட்சம் பேருக்கு மகளிர் உரிமைத்தொகை  முதலமைச்சர் மு க ஸ்டாலின் வழங்கினார்
Advertisement

மகளிர் உரிமைத் தொகைக்காக மேல்முறையீடு செய்தவர்களில் தகுதியானவர்களாக கண்டறியப்பட்ட 7 லட்சத்து 35 ஆயிரம் மகளிருக்கு உரிமைத் தொகை வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். 

Advertisement

தமிழ்நாட்டில் 1.06 கோடி மகளிருக்கு மாதந்தோறும் ரூ.1,000 வழங்கும் திட்டம் செப்.15-ம் தேதி தொடங்கப்பட்டது. 2 மாதங்கள் அளிக்கப்பட்ட நிலையில், 3-வது மாதமாக நவம்பர் மாதமும் வழங்கப்படவுள்ளது. தீபாவளி பண்டிகை காரணமாக, இந்த மாதம் உரிமைத் தொகை வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி, ஏற்கெனவே உள்ள பயனாளிகளுக்கு உரிமைத் தொகை அவரவர் வங்கிக் கணக்குகளில் சேர்க்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், மகளிர் உரிமைத் தொகை விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டவா்களில் சுமார் 11 லட்சம் பேர் மேல்முறையீடு செய்திருந்தனர். அவர்களில் 7 லட்சத்து 35 ஆயிரம் பேர் தகுதியானவர்களாகக் கண்டறியப்பட்டுள்ளனர். அவர்களுக்கு நவம்பர் மாதம் முதல் மகளிர் உரிமைத் தொகை அளிக்கப்படவுள்ளது. இதன் மூலம் மகளிர் உரிமைத் தொகை பெறுவோர் எண்ணிக்கை 1,13,84,300-ஆக உயர்ந்துள்ளது.

வைரஸ் காய்ச்சல் காரணமாக, கடந்த 5 நாள்களுக்கும் மேலாக ஓய்வெடுத்து வந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இன்று முதல் அலுவலகத்துக்கு வந்து தனது பணிகளைத் தொடங்கினார். அதன்படி, மகளிர் உரிமைத் தொகைத் திட்டத்தின் கீழ் 2-ம் கட்டமாக பயனாளிகள் சிலருக்கு உரிமைத் தொகையை வழங்கினார். இதற்கான நிகழ்ச்சி சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்றது. 

Tags :
Advertisement