குக்கர் வெடித்து பெண் பரிதாப பலி!
சென்னை திருவொற்றியூர் சரவணன் நகர் முதல் தெருவைச் சேர்ந்தவர் ஆறுமுகம்(62) இவருடைய மனைவி ராஜலட்சுமி (55) இவர்களுக்கு யுவ்ராஜ் (39) மகனும் சந்தியா (34) என்ற மகளும் உள்ளனர்.
இந்நிலையில், இன்று மதியம் கணவன் மனைவி இருவரும் மதியம் சாப்பிட்டு முடித்த பின்பு மதியம் வீட்டிற்கு ஏசி பழுது பார்ப்பதற்காக யுவ்ராஜ் நண்பர்கள் இருவரும் வந்துள்ளனர்.
அவ்வேளையில், மதியம் 1 மணி ஆனதால் ஏசி பழுது பார்க்க வந்த ஊழியர்கள் இருவரும் சாப்பிடுவதற்கு சாப்பாடு செய்யும்படி தாயிடம் மகன் யுவ்ராஜ் கூறியுள்ளார்.
இதனையடுத்து குக்கரில் வைத்த சாதம் தீடீரென வெடித்து சிதறியது இதில் ராஜலட்சுமி முகத்தின் மீது பட்டத்தில் காயமடைந்து மயக்கமடைந்தார். உடனே ராஜலட்சுமியை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட போது சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இச்சம்பவம் குறித்து சாத்தாங்காடு போலீசார் வழக்கு பதிவுசெய்து ராஜலட்சுமி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஸ்டான்லின் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து சாத்தாங்காடு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.