RCBvsPBKS | பைனலில் ஃபில் சால்ட் விளையாடுவாரா? - குழப்பங்களுக்கு பதில் இதோ!
நடப்பாண்டு இறுதிபோட்டி இன்று(ஜுன்.03) நடைபெறவுள்ள நிலையில், பெங்களூர் மற்றும் பஞ்சாப் அணிகள் அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் மோதவுள்ளன. இரு அணிகளும் இதுவரை நடந்த 17 ஐபிஎல் தொடரில் ஒரு கோப்பை கூட கைப்பற்றாத நிலையில் இன்று, ஐபிஎல் வரலாற்றில் முத்திரை பதிப்பதற்காக இரு அணிகளும் பல பரீட்சையில் ஈடுபட்டு வருகிறது.
தகுதிச்சுற்று 1-க்கு பிறகு நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில், தலைமை பயிற்சியாளர் ஆண்டி ஃப்ளவர் மற்றும் கேப்டன் ரஜத் படிதார் பெங்களூர் அணியின் விவரம் குறித்து தெரிவிக்கவில்லை. பெங்களூர் அணியில், இதுவரை தொடக்க வீரர்களாக ஃபில் சால்ட் மற்றும் விராட் கோலி சிறப்பாக ஆடி வருகின்றனர். இதில் ஃபில் சால்ட் பங்கேற்காதது அவர் இறுதிப்போட்டியில் பங்கேற்பாரா? என்ற யூகங்களுக்கு வழி வகுத்தது. மேலும் அவர் பயிற்சியில் பங்கேற்காததற்கு காரணம் அவரின் முதல் குழுந்தை பிறக்கவிருப்பதே காரணம் என்று பேசப்பட்டது.
இந்த நிலையில் குழந்தை பிறப்பிற்காக இங்கிலாந்து சென்ற ஃபில் சால்ட் மீண்டும் இந்தியா திரும்பி உள்ளார். இதனால் அவர் அணியில் தொடக்க வீரராக மீண்டும் விளையாடுவார் என்ற எதிர்பார்பை அதிகரித்துள்ளது. இது பெங்களூர் அணி ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான செய்தியாக அமைந்துள்ளது, காரணம் நடப்பு ஐபிஎல் ஃபில் சால்ட் 12 போட்டிகளில் 175.90 ஸ்ட்ரைக் ரேட்டில் விளையாடி 387 ரன்கள் எடுத்து அசத்தியுள்ளார்.