For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

#ActorDharshan -க்கு இன்று ஜாமின் கிடைக்குமா? - அழைத்துச் செல்ல ஹெலிகாப்டர் ரெடி!

07:28 AM Sep 27, 2024 IST | Web Editor
 actordharshan  க்கு இன்று ஜாமின் கிடைக்குமா    அழைத்துச் செல்ல ஹெலிகாப்டர் ரெடி
Advertisement

கொலை வழக்கில் பெல்லாரி சிறையில் இருக்கும் நடிகர் தர்ஷனுக்கு இன்று ஜாமின் கிடைத்தால் அவரை அழைத்து செல்ல ஹெலிகாப்டர் முன்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Advertisement

தனது பெண் தோழிக்கு ஆபாச மெசேஜ் அனுப்பியதால், தன்னுடைய ரசிகரான ரேணுகாசாமியை கடத்தி கொலை செய்ததாக, பிரபல கன்னட நடிகர் தர்ஷன் கைது செய்யப்பட்டார். பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டு இருந்த தர்ஷனுக்கு, சொகுசு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டதாக புகார் எழுந்தது.

மேலும் சிறையில் தர்ஷன் புகை பிடிக்கும் படம் மற்றும் நண்பர்களுடன் அமர்ந்து வீடியோ கால் பேசும் வீடியோ வெளியானது. இது பெரும் சர்ச்சையான நிலையில், சிறை காவலர்கள் உட்பட 9 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். சொகுசு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டது தொடர்பாக மூன்று வழக்குகள் பதிவு செய்யப்பட்டு அதை விசாரிக்க மூன்று தனி குழுக்கள் அமைக்கப்பட்டன.

தொடர்ந்து நடிகர் தர்ஷனை பெங்களூரு சிறையில் இருந்து வேறு சிறைக்கு மாற்ற 24வது கூடுதல் முதன்மை மாநகர மாஜிஸ்திரேட் நீதிமன்றம் ஆக.27ஆம் தேதி உத்தரவிட்டது. இந்த நிலையில் பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் இருந்த தர்ஷன் வட கர்நாடகாவில் உள்ள பெல்லாரி சிறைக்கு மாற்றப்பட்டார்.

இந்தநிலையில் நடிகர் தர்ஷன் தனக்கு ஜாமீன் வழங்க கோரி பெங்களூரு செசன்சு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். கடந்த 23-ந் தேதி இந்த மனு மீது விசாரணை நடத்திய நீதிபதி அரசு தரப்பில் ஆட்சேபனை மனு தாக்கல் செய்ய கால அவகாசம் வழங்கி, விசாரணையை செப்.27ம் தேதியான இன்றைக்கு ஒத்தி வைத்தார். எனவே நடிகர் தர்ஷன் ஜாமீன் மனு மீதான விசாரணை இன்று நடைபெற உள்ளது.

இன்றைய விசாரணையில் நடிகர் தர்ஷனுக்கு ஜாமீன் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒருவேளை இன்று தர்ஷனுக்கு நீதிமன்றம் ஜாமீன் வழங்கினால், பல்லாரி சிறையில் உள்ள தர்ஷனை பெங்களூருவுக்கு அழைத்து வர அவரது மனைவி விஜயலட்சுமி ஹெலிகாப்டர் ஏற்பாடு செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

இது தொடர்பாக அவர் பெங்களூருவை சேர்ந்த தனியார் ஹெலிகாப்டர் நிறுவனம் ஒன்றில் ஹெலிகாப்டர் முன் பதிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் விசாரணை முடிந்த பின்னர்தான் நடிகர் தர்ஷனுக்கு ஜாமீன் கிடைக்குமா? அல்லது அவர் மீண்டும் சிறை வாசம் அனுபவிக்க வேண்டுமா? என்பது தெரியவரும்.

Tags :
Advertisement