டிரம்ப்-ன் டின்னர் அழைப்பை மறுத்தது ஏன்? - பிரதமர் மோடி விளக்கம்!
ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் பாஜக நிகழ்ச்சி ஒன்றில் பிரதமர் மோடி பங்கேற்று சிறப்புரையாற்றினார். அப்போது அவர் பேசுகையில், “இரண்டு நாட்களுக்கு முன்பு, நான் G7 உச்சி மாநாட்டிற்காக கனடாவில் இருந்தேன். நான் அங்கு இருந்தபோது, அமெரிக்க அதிபர் டிரம்ப் என்னை அழைத்து, 'நீங்கள் கனடாவில் இருப்பதால், வாஷிங்டன் வழியாக வாருங்கள். இரவு உணவு சாப்பிட்டுவிட்டு பேசலாம்' என்றார்.
அவர் என்னை அங்கு வரச்சொல்லி வற்புறுத்தினார். அமெரிக்க அதிபரின் அழைப்பிற்கு நன்றி. ஆனால் மகாபிரபுவின் பூமிக்கு (ஒடிசா) செல்வது எனக்கு மிகவும் முக்கியம்" என்று பூரியில் உள்ள குறிப்பிட்டு மோடி கூறினார். தொடர்ந்து “மகாபிரபு மீதான உங்கள் அன்பும் பக்தியும் என்னை இந்த மண்ணுக்குக் கொண்டு வந்தது” என்று தெரிவித்தார்.
கனடாவில் நடைபெற்ற ஜி7 மாநாட்டில் பிரதமர் மோடி - அமெரிக்க அதிபர் டிரம்ப் தொலைபேசி உரையாடல் குறித்து சமீபத்தில் வெளியுறவு செயலாளர் விக்ரம் மிஸ்ரி, இந்தியா - பாகிஸ்தான் போரில் அமெரிக்க தலையீடு இல்லை என பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் டிரம்பிடம் கூறியதாக தெரிவித்தார். மோடி உடனானதொலைபேசி உரையாடலுக்கு பின்னர் டிரம்ப் மத்தியஸ்தம் செய்து வைத்ததாக பேசினார். இதை சுட்டிக்காட்டி காங்கிரஸ் கட்சி பாஜகவை விமர்சனம் செய்தது.