For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

மழை குறுக்கிட்டால் ஐபிஎல் கோப்பை யாருக்கு? - விதிமுறைகள் கூறுவது என்ன?

ஐபிஎல் 2025 இறுதி போட்டியில் மழை குறுக்கிட்டால் கோப்பை யாருக்கு? என்பதை பற்றியும் விதிமுறைகள் கூறுவது என்ன? என்பதை பற்றியும் இந்த செய்தி தொகுப்பில் பார்ப்போம்...
05:46 PM Jun 03, 2025 IST | Web Editor
ஐபிஎல் 2025 இறுதி போட்டியில் மழை குறுக்கிட்டால் கோப்பை யாருக்கு? என்பதை பற்றியும் விதிமுறைகள் கூறுவது என்ன? என்பதை பற்றியும் இந்த செய்தி தொகுப்பில் பார்ப்போம்...
மழை குறுக்கிட்டால்  ஐபிஎல் கோப்பை யாருக்கு    விதிமுறைகள் கூறுவது என்ன
Advertisement

அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் இன்று(ஜுன்03) நடப்பாண்டிற்கான ஐபிஎல் இறுதி போட்டி நடைபெறவுள்ளது. இந்த போட்டியில் முதல் கோப்பை கனவுடன் பெங்களூர் மற்றும் பஞ்சாப் அணிகள் மோதுகின்றன.  இந்த சூழலில் அகமதாபாத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இது அண்மையில் அங்கு நடந்த இரண்டாவது தகுதிச்சுற்று போட்டியை பாதித்தது. அந்த வகையில் இன்றும் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.

Advertisement

இது குறித்து இந்திய வானிலை ஆய்வு மையம், இன்று முதல் ஜூன் 7 வரை அகமதாபாத்தில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்று தெரிவித்துள்ளது. அதன்படி , லேசான மழை என்பது 2.5 முதல் 15.5 மிமீ வரையிலும், மிதமான மழை என்பது 15.6 முதல் 64.4 மிமீ வரையிலும் பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நடவிருக்கும் ஐபிஎல் இறுதிபோட்டி ஒரு வேளை மழையால் தடைபட்டால், இரண்டாம் தகுதிக்சுற்றுபோல் கால இடைவெளி அளிக்கப்படும். அதையும் மீறி மழை தொடர்ந்தால் ஐபிஎல் விதிமுறையின்படி ரிசர்வ் டே அடிப்படையில் நாளை போட்டி நடைபெறும். நாளையும் மழை குறுக்கிட்டால் புள்ளிப் பட்டியலில் முதல் இடம் பிடித்த பஞ்சாப் அணிகே கோப்பை கனவு நிறைவேறும்.

Tags :
Advertisement