For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

இரவு 7 மணி வரை எந்தெந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு?

தமிழ்நாட்டில் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு தமிழ்நாட்டில் 15 மாவட்டங்களில் மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
05:25 PM May 26, 2025 IST | Web Editor
தமிழ்நாட்டில் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு தமிழ்நாட்டில் 15 மாவட்டங்களில் மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இரவு 7 மணி வரை எந்தெந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
Advertisement

தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் தமிழ்நாட்டில் கோவை, நீலகிரியில் கனமழை பெய்து வருகிறது. இதனிடையே தமிழ்நாட்டில் இன்று ஒரு சில இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

Advertisement

இந்த நிலையில் தமிழ்நாட்டில் உள்ள 15 மாவட்டங்களில் இன்று இரவு 7 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, நீலகிரி, கோவை, தேனி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, வேலூர், ராணிப்பேட்டை, ஈரோடு, திருப்பூர், திண்டுக்கல், புதுக்கோட்டை, தஞ்சாவூர், மயிலாடுதுறை மற்றும் விருதுநகர் உள்ளிட்ட 15 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக நீலகிரி மற்றும் கோவை மாவட்டங்களுக்கு சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags :
Advertisement