"எங்கே செல்லும் இந்தப் பாதை..? யாரோ.. யாரோ அறிவாரோ?" - உயர்ந்து கொண்டே செல்லும் தங்கம் விலை!
தமிழ்நாட்டில் சென்னை போன்ற முக்கிய நகரங்களில் தங்கத்தின் வர்த்தகம் மிகவும் அதிகமாக உள்ளது. சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலை அவ்வப்போது உயர்ந்தும், குறைந்தும் வருகிறது. ஏற்ற, இறக்கத்துடன் காணப்பட்டு வந்த தங்கம் விலை கடந்த அக்டோபர் மாதம் 30-ம் தேதி ஒரு சவரன் ரூ.59 ஆயிரத்தை கடந்து அதிர்ச்சியை கொடுத்தது.
அதனை தொடர்ந்து நவம்பர் மாத தொடக்கத்தில் இருந்தே தங்கம் விலை ஏற்ற, இறக்கத்துடன் காணப்பட்டு வந்தது. இதற்கிடையே, கடந்த சில தினங்களுக்கு முன்னே வரலாற்றிலேயே இல்லாத அளவுக்கு தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.66,000 என்கிற புதிய உச்சத்தை எட்டி நகைப்பிரியர்களுக்கு மேலும் மேலும் ஷாக் கொடுத்தது.
அந்த வகையில் நேற்று தங்கம் விலை சவரனுக்கு கிராமுக்கு 40 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் ரூ.8 ஆயிரத்து 235-க்கும் சவரனுக்கு 320 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.65 ஆயிரத்து 880க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில் மூன்றாவது நாளாக இன்றும் தங்கம் விலை உயர்ந்துள்ளது. அதன்படி, சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.105 உயர்ந்து ரூ.8,340-க்கும், சவரனுக்கு ரூ.840 உயர்ந்து ரூ.66,720-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலையில் கிராம் ஒன்றுக்கு ரூ.3 உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி 114 ரூபாய்க்கும், பார் வெள்ளி ரூ.1,14,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.