Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

“தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடப்பட்ட போது, ‘தெக்கணமும் அதன் சிறந்த திராவிட நல்திருநாடும்’ என்னும் வரி திட்டமிட்டே தவிர்ப்பு!” - திருமாவளவன் கண்டனம்!

09:42 AM Oct 19, 2024 IST | Web Editor
Advertisement

தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடப்பட்ட போது, "தெக்கணமும் அதன் சிறந்த திராவிட நல்திருநாடும் " என்னும் வரி திட்டமிட்டே தவிர்க்கப்பட்டுள்ளது என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

Advertisement

டி.டி.தமிழ் தொலைக்காட்சி அலுவலகத்தில் நடைபெற்ற 'இந்தி மாத' கொண்டாட்ட நிறைவு விழாவில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி பங்கேற்றுள்ளார். அந்நிகழ்வில், தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடப்பட்ட போது, "தெக்கணமும் அதன் சிறந்த திராவிட நல்திருநாடும் " என்னும் வரி திட்டமிட்டே தவிர்க்கப்பட்டுள்ளது. இது தமிழ்நாட்டு மக்களுக்கு எதிரான ஆளுநரின் 'வெறுப்பு உளநிலையை' உறுதிபடுத்துகிறது.

ஆளுநரின் இத்தகைய போக்கு கண்டனத்துக்குரியது. ஏற்கனவே, பொதிகை என்னும் பெயரை நீக்கியது, தொலைக்காட்சியின் இலச்சினையை காவி நிறத்துக்கு மாற்றியது என தொடர்ந்து தமிழர்களுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்துவரும் பாஜக அரசையும்; ஆளுநர் ஆர்.என். ரவியையும் விசிக சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறோம்.

Tags :
திராவிடதிராவிட நல்திருநாடும்திராவிடநல்திருநாடுதமிழ்நாடுDravidamdravidian modelnews7 tamilPM ModiRN RaviTamilNaduthirumavalavan
Advertisement
Next Article