Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

#Drishyan3 படப்பிடிப்பு எப்போது? வெளியான அப்டேட்!

04:02 PM Oct 08, 2024 IST | Web Editor
Advertisement

த்ரிஷ்யம் - 3 திரைப்படத்தின் படப்பிடிப்பு அடுத்தாண்டு துவங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Advertisement

ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மோகன்லால், மீனா நடிப்பில் 2013-ம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் ‘த்ரிஷ்யம்’. ஒரு சாதாரண மனிதன் தனது குடும்பத்தைப் பாதுகாக்க எதிர்கொள்ளும் சவால்கள், எதிர்பாராத திருப்பங்களே த்ரிஷ்யம் படத்தின் கதை. மலையாளத்தில் வரவேற்பைப் பெற்ற இந்தப்படம் தமிழ் (பாபநாசம்), தெலுங்கு, கன்னடம், இந்தி, சிங்களம், கொரியன் உள்ளிட்ட மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டது. சீன மொழியில் ரீமேக் செய்யப்பட்ட முதல் இந்தியப் படம் ‘த்ரிஷ்யம்’ என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்து, ‘த்ரிஷ்யம் 2’ திரைப்படமும் பெரும் வரவேற்பைப் பெற்றது. இதற்கிடையே, இந்த திரைப்படத்தின் 3-வது பாகம் உருவாகும் என அறிவித்து ரசிகர்களின் எதிர்பார்பை கூட்டினார் இயக்குநர் ஜீத்து ஜோசஃப். தொடர்ந்து, இப்படம் குறித்த அறிவிப்பு எப்போது வெளியாகும் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.

இந்த நிலையில், த்ரிஷ்யம் - 3 திரைப்படத்தின் படப்பிடிப்பு அடுத்தாண்டு அதாவது 2025 ஆம் ஆண்டு துவங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் மோகன்லால் தற்போது பிருத்விராஜ் இயக்கத்தில் 'எம்புரான்' என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்த பிறகு த்ரிஷ்யம் - 3 படத்தில் இணைவார் எனவும் கூறப்படுகிறது. விரைவில் இது தொடர்பான அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags :
cinema updateDrishyanJeethu JosephmeenaMohanlalmovienews7 tamil
Advertisement
Next Article