For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

3 ஆண்டுகளாக ஆளுநர் என்ன செய்து கொண்டிருந்தார்? - உச்ச நீதிமன்றம் சரமாரி கேள்வி!

01:03 PM Nov 20, 2023 IST | Web Editor
3 ஆண்டுகளாக ஆளுநர் என்ன செய்து கொண்டிருந்தார்    உச்ச நீதிமன்றம் சரமாரி கேள்வி
Advertisement

தமிழ்நாடு அரசு சார்பில் மூத்த வழக்கறிஞர் அபிஷேக் சிங்வியும் ஆஜராகி வாதிட்டார்.  அப்போது அவர், ஏற்கனவே மசோதாக்கள் இயற்றப்பட்டு அனுப்பிய நிலையில் அதனை கிடப்பில் போட்டுவிட்டு தற்போது 10 மசோதாக்கள் ஆளுநர் திரும்ப அனுப்பியுள்ளார். அதனை சட்டமன்றம் மீண்டும் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பியுள்ளது.  இரண்டாம் முறை இயற்றி அனுப்பினால் அதனை Money Bill-லாக தான் பார்க்க வேண்டும். எனவே அதனுக்கு உடனடியாக ஒப்புதல் அளிக்க வேண்டும்.  சட்டமன்றம் இயற்றிய மசோதா தவறாக இருந்தாலும்,  ஆளுநருக்கு அதனை நிறுத்தி வைக்க என்ன அதிகாரம் உள்ளது? என கேள்வி எழுப்பினார்.

அப்போது குறிக்கிட்ட தலைமை நீதிபதி  சந்திரசூட்,  ஆளுநர் திருப்பி அனுப்பியது தொடர்பான Communication ஆவணங்கள் எங்கு உள்ளது ? என கேள்வி எழுப்பினார். மேலும்,  இந்த மசோதாக்கள் உச்சநீதிமன்றத்தின் உத்தரவுக்கு பிறகு திருப்பி அனுப்பப் பட்டது ஏன்? என்றும்,  கடந்த 10 ஆம் தேதி நீதிமன்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 13ம் தேதி மசோதாக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஆளுநர் தெரிவித்துள்ளார் என அதிருப்தி தெரிவித்த நீதிபதிகள் 3 ஆண்டுகளாக ஆளுநர் என்ன செய்து கொண்டிருந்தார்? என கேள்வி எழுப்பினார்.

அரசுகள் உச்ச நீதிமன்றத்தை அணுகும் வரை ஆளுநர்கள் ஏன் காத்திருக்க வேண்டும்?

- சட்டசபை மசோதா தவறு என கருதினால் திருப்பி அனுப்பும் போது மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்ற குறிப்பு இடம் பெற வேண்டும்.

- சட்டசபையில் 2-வது முறையாக மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டால் நிதி மசோதாக்களை போல கருதி ஆளுநர் ஒப்புதல் தர வேண்டும்.

- மாநில அரசுகள் உச்சநீதிமன்றத்துக்கு வரும் வரை மாநில ஆளுநர்கள் ஏன் ஒப்புதல் தராமல் இருக்க வேண்டும்? என்றும் கேள்வி எழுப்பினார்.

இதனையடுத்து,  மசோதாக்கள் மீது ஆளுநர் முடிவெடுக்க சற்று அவகாசம் வேண்டும் என்ற மத்திய அரசு தலைமை வழக்கறிஞர் கூற்றை ஏற்ற நீதிபதி  வழக்கு விசாரணையை டிசம்பர் 1ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

Advertisement