வைகை செல்வன் உடனான சந்திப்பில் நடந்தது என்ன? - திருமாவளவன் விளக்கம்
சென்னை அசோக் நகரில் விசிக தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது,
"ஜுன் 14ம் தேதி திட்டமிட்டவாறு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் ஒருங்கிணைக்கப்பட்ட தச்சார்பின்மை காப்போம் பேரணி மாபெரும் வெற்றியை பெற்றது. லட்சக்கணக்கானோர் பங்கேற்ற இந்த பேரணி தமிழ்நாட்டு அரசியலில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் அரசியலில் ஒரு மைல் கல்லாக அமைந்திருக்கிறது. இந்த வெற்றி பெற காரணமாக இருந்த அனைவருக்கும் எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். கடந்த 11 ஆண்டுகளாக பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு இஸ்லாமிய, கிறிஸ்தவர்களுக்கு எதிரான வெறுப்பு அரசியலை நடத்தி வருகிறது.
இதனை புரிந்து கொள்வதன் மூலம்தான் நாட்டையும், அரசையும் காப்பாற்ற முடியும். அண்டை நாடுகளாகல் வரும் ஆபத்தை விட பாஜக அரசு போன்ற அமைப்புகள் பின்பற்றும் கொள்கைகள் தான் பெரும் தீங்காக போய் முடியும். முத்தலாக், வக்ஃபு வாரிய சட்டம் உள்ளிட்டவை அரசியலமைப்புக்கு எதிரானவை. இதனை மக்களுக்கு உணர்த்தும் வகையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி மதச்சார்பின்மை காப்போம் பேரணியை நடத்தியுள்ளோம். வரும் சட்டமன்ற தேர்தலில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி மிகப்பெரிய வெற்றி பெரும்.
இந்த மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் அங்கம் வகிக்கும் இந்தியா கூட்டணி பாஜகவின் நடைமுறைகளை கடுமையாக எதிர்க்க வேண்டும். வக்ஃபு வாரிய சட்டம், குடியுரிமை திருச்ச சட்டங்களை திரும்ப பெற வேண்டும் உள்ளிட்ட 12 தீர்மானங்களை நிறைவேற்றியுள்ளோம். இந்த தீர்மானங்களை விளக்க அனைத்து மாவட்டங்களிலும் பொதுக்கூட்டங்கள் நடைபெறும். விசிக சார்பில் ஆண்டுதோறும் வழங்கப்படும் விருதுகள் வழங்கும் விழா வரும ஜுன் 24ம் தேதி நடைபெறும். சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெறும் இந்த விழாவில் 7 விருதுகள் வழங்கப்பட உள்ளன.
ஈரான் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதல் உலகளவில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. தற்போது ஈரானும் பதில் தாக்குதல் நடத்தியுள்ளது. இதில் அமெரிக்காவின் தலையீடு இருப்பதாக பேசப்படுகிறது. இந்திய அரசு இதனை கண்டிக்க வேண்டும் என வலியுறுத்திகிறோம். இஸ்ரேலுக்கு ஆதரவான நிலைப்பாடு என்பது பாதுகாப்பனது அல்ல. பாஜக - அதிமுக கூட்டணி அமைந்திருந்தாலும், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூட்டணி ஆட்சிக்கு அதிமுக உடன்பட்டிருப்பதாக வெளிப்படையாக பேசவில்லை என்பதுதான் எதார்த்தமான உண்மை.
பாஜக தரப்பில் தான் மீண்டும் மீண்டும் சொல்லப்படுகிறது. தேர்தலில் அதிகமான சீட்டுகள் கேட்பதால் கூட்டணி உடையக்கூடிய வாய்ப்பு இல்லை. கள் என்பது உணவு என்ற வாதம் முன்வைக்கப்படுகிறது. இதனால் எந்த பாதிப்பும் இல்லை என்றும் சொல்லப்படுகிறது. கள் என்றாலே போதை என்றுதான் அர்த்தம். கள் போன்ற போதை பொருள்களின் புலக்கத்தை ஒழிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளோம்.
கள் அருந்துவது உடலுக்கு நல்லதா? என்பதை சிந்திக்க வேண்டும். கள் இறக்கும் தொழிலாளர்களுக்கு மாற்று தொழிலுக்கு ஏற்பாடு செய்ய வேண்டும். அதிமுக முன்னாள் அமைச்சர் வைகைச் செல்வன் நான் தங்கியிருந்து விடுதியில் தங்கியிருந்தார். அவர் என் அறைக்கு வந்தது புத்தகத்தை பரிசளித்தார். அவர் சில நூல்களை எழுதியிருப்பதாகவும், அதனை விரைவில் வெளியிட உள்ளதாகவும் அறிவித்தார். அரசியல் சார்ந்து எதுவும் பேசவில்லை"
இவ்வாறு விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்தார்.