For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

#WeatherUpdate : அடுத்த 3 மணிநேரத்தில் 9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

07:30 AM Oct 18, 2024 IST | Web Editor
 weatherupdate   அடுத்த 3 மணிநேரத்தில் 9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
Advertisement

தமிழ்நாட்டில் அடுத்த மூன்று மணிநேரத்தில் 9 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது என தென் மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Advertisement

வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் தமிழ்நாட்டில் பரவலாக மழை பெய்து வருகிறது. இன்னும் கனமழை தொடங்கவில்லை. இந்நிலையில் தமிழ்நாட்டில் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு மிதமான இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களிலும் பெய்ய வாய்ப்புள்ளது என தென் மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும் லேசான இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை திருப்பத்தூர், விழுப்புரம், கடலூர், ராணிப்பேட்டை, வேலூர் ஆகிய 5 மாவட்டங்களில் பெய்ய வாய்ப்புள்ளது எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Tags :
Advertisement