For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

#WeatherUpdate - அடுத்த மூன்று மணிநேரத்தில் 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

07:10 AM Sep 21, 2024 IST | Web Editor
 weatherupdate   அடுத்த மூன்று மணிநேரத்தில் 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
Advertisement

தமிழ்நாட்டில் அடுத்த மூன்று மணிநேரத்தில் 11 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என தென்மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Advertisement

தென்மேற்கு பருவமழை வழக்கத்தை விட இம்முறை தமிழ்நாட்டில் சற்று அதிமாக பெய்திருந்தாலும், கடந்த சில நாட்களாக தமிழ்நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் வெப்பநிலை மிகக் கடுமையாக உயர்ந்தது. நேற்றுவரை வெயில் சுட்டெரித்த நிலையில் சென்னை நகரின் பல பகுதிகளில் இரவுமுதல் காலைவரை பரவலாக மழை பெய்தது.

இந்நிலையில் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட 4 மாவட்டங்களில், இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என தென்மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும் வேலூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், திருவண்ணாமலை மற்றும் மயிலாடுதுறை உள்ளிட்ட 7 மாவட்டங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் மழை பெய்ய வாய்ப்புள்ளது என தென்மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Tags :
Advertisement