For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

"வீரர்களுக்கு பக்கபலமாய் நிற்போம், தீவிரவாதத்தை வேரறுப்போம்" - நடிகர் சங்கம் அறிக்கை!

வீரர்களுக்கு பக்கபலமாய் நிற்போம், தீவிரவாதத்தை வேரறுப்போம் என தென்னிந்திய நடிகர் சங்கம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
04:19 PM May 10, 2025 IST | Web Editor
வீரர்களுக்கு பக்கபலமாய் நிற்போம், தீவிரவாதத்தை வேரறுப்போம் என தென்னிந்திய நடிகர் சங்கம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
 வீரர்களுக்கு பக்கபலமாய் நிற்போம்  தீவிரவாதத்தை வேரறுப்போம்    நடிகர் சங்கம் அறிக்கை
Advertisement

ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் கடந்த ஏப்ரல் 22ம் தேதி பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு பின்னால் பாகிஸ்தான் இருப்பதாக சந்தேகித்த இந்தியா, பாகிஸ்தான் உடனான உறவை இந்தியா முற்றிலுமாக துண்டித்தது. குறிப்பாக, வான்பரப்பு மூடல், சிந்துநதி ஒப்பந்தம் ரத்து, பாகிஸ்தானியர்கள் வெளியேற்றம் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டது.

Advertisement

இதற்கிடையே, கடந்த 7ம்தேதி நள்ளிரவு 1.44 மணியளவில் ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியது. மொத்தம் 9 இடங்களில் (சகாம்ரு, முரித்கி, கோட்லி, சியால்கோட், குல்பூர், பிம்பர், பஹவல்பூர்) பயங்கரவாத முகாம்களை குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து, இந்தியா - பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளும் மாறி மாறி தாக்குதல் நடத்தி வருகின்றன. இதனால் எல்லையில் போர் பதற்றம் நிலவி வருகிறது.

இந்த நிலையில், இந்த தாக்குதல் குறித்து தென்னிந்திய நடிகர் சங்கம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது,

"26 உயிர்கள்....
இன்று 140 கோடி மக்களின் மனதை துடிக்க, துவளச் செய்திருக்கிறது. ஆயினும் கட்டுப்பாட்டில் ஒன்றாய் ஒற்றுமையாய் நிற்கிறது. உணர்ச்சிப்பெருக்கால் மட்டுமின்றி, எதிரியின் நகர்வை தீவிரமாய் கவனித்து ஆழ ஆராய்ந்து பதிலடி கொடுத்துவிடுகின்றன நம் தேசத்தின் முப்படைகளும்.. முடிவு செய்யும் அரசும்...
இறையாண்மை காக்கவும், பொதுமக்களுக்கு பாதுகாப்பு கவசமாய் உயர்ந்து நிற்கும் முப்படை வீரர்களுக்கும் மத்திய அரசிற்கும் 140 கோடி மக்களின் சார்பாக தென்னிந்திய நடிகர் சங்கம் நன்றி சொல்கிறது. அரசின் வழிகாட்டுதலை கடைபிடிப்போம். வீரர்களுக்கு பக்கபலமாய் நிற்போம்.
நாட்டின் வளர்ச்சிக்கும், மக்கள் மகிழ்ச்சிக்கும் தடையாய் ஆட்டமாடும் தீவிரவாதத்தை வேரறுப்போம்"

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
Advertisement