For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

"இந்தியாவுக்கு தங்கு தடையின்றி எண்ணெய் ஏற்றுமதியை தொடர்வோம்" - ரஷ்ய அதிபர் புதின் பேச்சு...!

இந்தியாவுக்கு எண்ணெய் ஏற்றுமதியை தங்கு தடையின்றி தொடர்வோம் என்று ரஷ்ய அதிபர் புதின் பேசியுள்ளார்.
06:11 PM Dec 05, 2025 IST | Web Editor
இந்தியாவுக்கு எண்ணெய் ஏற்றுமதியை தங்கு தடையின்றி தொடர்வோம் என்று ரஷ்ய அதிபர் புதின் பேசியுள்ளார்.
 இந்தியாவுக்கு தங்கு தடையின்றி எண்ணெய் ஏற்றுமதியை தொடர்வோம்    ரஷ்ய அதிபர் புதின் பேச்சு
Advertisement

ரஷ்ய அதிபர் விளாடிமர் புதின் இரண்டு நாள் பயணமாக நேற்று இந்தியா வந்தார். அவரி இந்திய பிரதமர் மோடி நேரில் சென்று வரவேற்றார். இன்று டெல்லியில் உள்ள ஹைதராபாத் இல்லத்தின் உள்ள அரங்கில் 23-ஆவது ஆண்டு இந்தியா-ரஷ்யா உச்சி மாநாட்டுக்கு முன்பாக இரு நாட்டுத் தலைவா்களும் அறிமுக உரையாற்றினர்.

Advertisement

அப்போது பேசிய ரஷ்ய அதிபர் புதின், ”இந்தியாவின் வரவேற்பு மற்றும் உபசரிப்புக்கு நன்றி. இந்தியா ரஷ்யா இடையேயான பொருளாதார ஒத்துழைப்பு தொடரும். கடந்த ஆண்டு கடந்த ஆண்டு, எங்கள் இருதரப்பு வர்த்தக வருவாய் 12 சதவீதம் அதிகரித்து, ஒரு புதிய சாதனையை படைத்தது. இந்த ஆண்டு வர்த்தக ஒப்பந்தம் அதே ஈர்க்கக்கூடிய அளவில் இருக்கும் என்று நாங்கள் கணித்து வருகிறோம். இந்தியாவுக்கு தங்கு தடையின்றி எண்ணெய் ஏற்றுமதியை தொடர்வோம்" என்று தெரிவித்தார்

Tags :
Advertisement