Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

“இஸ்லாமிய உரிமைக்கு போராடும் நாங்கள்தான் இஃப்தார் நோன்பு நிகழ்ச்சியில் பங்கேற்க தகுதியானவர்கள்” - முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பேச்சு!

இஸ்லாமிய உரிமைக்கு போராடும் நாங்கள்தான் இஃப்தார் நோன்பு நிகழ்ச்சியில் பங்கேற்க தகுதியானவர்கள் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பேசியுள்ளார்.
08:28 PM Mar 24, 2025 IST | Web Editor
Advertisement

சென்னை திருவான்மியூரில் திமுக சிறுபான்மையினர் நல உரிமைப் பிரிவின் இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பங்கேற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இஃப்தார் நோன்பு திறந்து சிறப்புரையாற்றினார்.

Advertisement

அப்போது அவர் பேசியதாவது, “தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர்கள் அண்ணா மற்றும் கருணாநிதி ஆகியோரை இணைக்க பாலமாக இருந்தது இஸ்லாமிய சமுதாயம்தான். கருணாநிதி ஆட்சிக்கு வந்ததும் மிலாடி நபிக்கு அரசு விடுமுறை அளித்தார். அதை அதிமுக அரசு ஆட்சிக்கு வந்ததும் ரத்து செய்தது. மீண்டும் ஆட்சிக்கு வந்த கருணாநிதி மிலாடி நபிக்கு  விடுமுறை அறிவித்தார். உருது பேசும் இஸ்லாமியர்களை பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்த்தார். சிறுபான்மையினர் நல ஆணையத்தை தொடங்கினார். வக்ஃப் வாரிய சொத்துகளை பராமரிக்க மானியம் வழங்கினார்.

தமிழ்நாடு சிறுபான்மையினர் மேம்பாட்டு கழகத்தை தொடங்கினார். உருது அகாடமி தொடங்கினார் இப்படி இஸ்லாமியர்களுக்கு பல முன்னெடுப்புகளை எடுத்தார். அவர் இஸ்லாமியர்கள் வேறு தான் வேறு என்று நினைத்ததில்லை. அதற்கு நன்றி சொல்லி தன்னை இஸ்லாமியர்களிடமிருந்து பிரித்துவிடாதீர்கள் என்று கூறினார். அவரின் வழித்தடத்தில்தான் இன்றைக்கு திமுக ஆட்சி செயல்பட்டுக்கொண்டிருக்கிறது.

சிறுபான்மையினர்களின் சமூக பொருளாதாரத்தை மேம்படுத்த பல்வேறு திட்டங்களை கடந்த நான்கு ஆண்டுகளாக சிறப்பாக செய்து வருகிறோம். தமிழ்நாடு மாநில ஹஜ் குழுவுக்கு  ஆண்டு நிர்வாக மானியம் ரூ.80 லட்சமாக உயர்த்தி வழங்கப்பட்டு வருகிறது. ஹஜ் பயனர்களுக்கு தலா 25 ஆயிரம் ரூபாய் வழங்க ஆணை வெளியிடப்பட்டிருக்கிறது. 11364 ஹஜ் பயணிகள் புனித பயணம் மேற்கொண்டுள்ளனர். இதற்காக 24 கோடியே 54 லட்சம் மானியம் வழங்கப்பட்டுள்ளது. இப்படி பல திட்டங்களை நான்கு ஆண்டுகளில் திமுக அரசு செய்துள்ளது.

அரசியல் ரீதியான அச்சுறுத்தல் வரும்போது இஸ்லாமியர்களை காக்கும் அரணாக திமுக செயல்பட்டு வருகிறது. மற்ற மாநிலங்களில் வருந்ததக்க சூழல் இருந்தாலும், நம் தமிழ்நாட்டில் மத ரீதியான வன்முறை நடக்காமல் திமுக அரசு காத்து வருகிறது. குடியுரிமை திருத்த சட்டம் மூலம் அச்சுறுத்தல் ஏற்பட்டப்போது, அதற்கு எதிரான மக்கள் இயக்கத்தை நடத்தி 1 கோடி கையெழுத்து பெற்று குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைத்தோம். ஆனால் குடியுரிமை திருத்த சட்டத்தை அதிமுக ஆதரித்தது. அவர்கள் எதிர்த்து வாக்களித்திருந்தால் அந்த சட்டமே நிறைவேறியிருக்காது. திமுக-வும் அதன் கூட்டணி கட்சிகளும் நாடாளுமன்றத்தில் அந்த சட்டத்திற்கு எதிராக நாடாளுமன்றத்தில் வாக்களித்தோம். மக்கள் மன்றத்திலும் போராடினோம்.

அன்றைக்கு முதலமைச்சராக இருந்த பழனிசாமி இந்த சட்டத்தால் ஒரு இஸ்லாமியர்களும் பாதிப்பு ஏற்படாது என்றார். இதை சிறுபான்மை இன மக்கள் மறக்கவும் மன்னிக்கவும் மாட்டார்கள். இப்போது எந்த கூச்சமும் இல்லாமல் இஸ்லாமிய விழாக்களில் பங்கேற்கிறார். பொது சிவில் சட்டத்திற்கு எதிராக மத்திய சட்ட ஆணயத்துக்கு கடிதம் அனுப்பியது திமுகதான்.

இப்போது கூட வக்ஃப் வாரிய மசோதா இந்திய அளவில் பேசு பொருளாக உள்ளது. சிறுபான்மையின மக்கள் உரிமையை பறிக்கும் வகையில் பாஜக இதை கொண்டு வருகிறது.  அதை  திமுக-வும்  அதன் கூட்டணி கட்சியினரும் நாடாளுமன்றத்தில் எதிர்த்து குரல் எழுப்பி வருகின்றனர். ஒருவேளை அது சட்டமானால் அதை ரத்து செய்ய  உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும் என்று ஏற்கெனவே அறிவித்திருக்கிறோம்.

பாஜக சதி திட்டம் நிறைவேற திமுக ஒருபோதும் அனுமதிக்காது. உறுதியாக போராடுவோம் உங்களுக்கு எப்போதும் துணையாக இருப்போம். இஸ்லாமிய உரிமைகளை காப்பாற்ற நாங்கள் செயல்படுவோம். இஸ்லாமியர்களின் உரிமைகளுக்காக போராடும், வாதாடும் நாங்கள்தான் இப்படிப்பட்ட நிகழ்ச்சியில் பங்கேற்க தகுதி படைத்தவர்கள். அந்த தகுதியோடு, சகோர அன்போடு இதுபோன்ற விழாக்களை நடத்துகிறோம் பங்கேற்கிறோம்.  இஸ்லாமியர்களுக்கு என் ரமலான் வாழ்த்துகள்”

இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Tags :
DMKIftarpartyMKStalinRamadanmonth
Advertisement
Next Article