“விவசாயிகளுக்கு துரோகம் செய்த கடந்த ஆட்சியாளர்களை களை எடுக்க வேண்டும்”- முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பேச்சு!
ஈரோட்டில் வேளாண் கண்காட்சி மற்றும் கருத்தரங்கு தொடக்க விழா இன்று(ஜூன்.11) நடைபெற்றது. இதை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கலந்துகொண்டு தொடங்கி வைத்த பின் சிறப்புறையாற்றினார்.
அப்போது அவர் பேசியதாவது, “பாசனத்திற்கான தண்ணீரை நான் நாளை மேட்டூரில் இருந்து திறந்து வைப்பதற்கு முன்பு கொங்கு மண்டல வேளாண் குடிமக்களை சந்திப்பதில் மகிழ்ச்சியாக உள்ளது. இந்த பிரம்மாண்டமான கண்காட்சி பார்வையிட்ட போது எனது மனதில் அளவற்ற மகிழ்ச்சி அளிக்கிறது. விவசாயிகளால் தான் இந்த மக்கள் உடல் வலிமையோடு வாழ்கிறார்கள்.
வேளாண் வளர்ச்சியில் பல முன்னோடிகள் கொண்ட மாவட்டம் ஈரோடு. மாநிலத்தில் 8வது இடத்தில் ஈரோடு உள்ளது. காளிங்கராயன் கீழ் பவானி பாசனம்
இந்தியாவின் மஞ்சள் மாநகரமாக ஈரோடு உள்ளது.உழவர் நலத்துறை உள்ளடக்கி வேளாண் துறை, வேளாண் உழவர் நலத்துறையாக மாற்றம் செய்து திட்டம் கொண்டு வரப்படுகிறது. அதன் அடிப்படையில் வேளாண் பட்ஜெட் கொண்டு வந்தோம். அதன் மூலம் கடந்த 4ஆண்டுகளில் உணவு உற்பத்தி 4லட்சம் உணவுடன் உற்பத்தி எட்டி உள்ளோம்.
கூட்டுறவு துறை மூலம் ரூ.62 ஆயிரம் கோடி ரூபாய் பயிர் கடனாக 8 0லட்சம் விவசாயிகளுக்கு கால்நடை கடன் வழங்கப்பட்டது. 2 லட்சம் வேளாண் இலவச மின் இணைப்பு வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு ரூ. 1.80 லட்சத்துக்கு மேல்மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் ஆதார் விலை விட 349 ரூபாய் சிறப்பு ஊக்கத்தொகை மாநில அரசு வழங்கியுள்ளது. இப்படி பார்த்து பார்த்து விவசாயிகளுக்கு வழங்கி உள்ளோம்
சிறு தானியங்கள் உற்பத்தி முதலிடம், மக்காச்சோளம் எண்ணெய் வித்துக்கள் உற்பத்தியில்இரண்டாவது இடம், இதுபோன்ற திட்டம் விரைவுப் படுத்த தான் கலைஞர் ஒருங்கிணைந்த கிராம வேளாண் திட்டம் கொண்டு வரப்பட்டது. தானியங்கள், காய்கறிகள் பழங்கள் விளைவிக்க ஊக்கப்படுத்தும் வகையில் இதுபோன்ற திட்டத்தில் 20 லட்சம் விவசாயிகள் பயன் பெற்றுள்ளனர்.
அதற்காக விவசாயிகள் போன்று தோலில் துண்டு போட்டு நடிப்பவர்கள் நாங்கள் இல்லை. முருங்கை இயக்கம், தோட்டக்கலை பயிர்கள், தென்னை, மிளகாய் போன்ற ஏராளமான சிறப்பு திட்டம் வேளாண் இயந்திரங்கள் வாங்க மானியம், உழைப்புக்கு ஏற்ற உழவர்கள் பயன் பெறும் வகையில் 125உழவர் சந்தை புதுப்பித்து 12புதிய வேளாண் சந்தை உருவாக்கம். மஞ்சள் ஆராய்ச்சி மையம் ஈரோட்டில் தொடங்கப்பட்ட நிலையில் கூடுதலாக மஞ்சள் சாகுபடி அதிகரித்து உள்ளது.
பவானி ஆற்றில் 8 தடுப்பணைகள் கீழ் பவானி வாய்க்கால் 518கோடி ரூபாய் மதிப்பீட்டில் புனரமைப்பு, உழவர் பாதுகாப்பு திட்டம் 2023ம் ஆண்டு முதல் ரூ. 6 கோடியே 61லட்சம், 5560 விவசாயிகளுக்கு ஈரோடு மாவட்டத்தில் வழங்கப்பட்டது. வேளாண் உற்பத்தி பொருட்கள் அதிகரிக்க இந்த வேளாண் கண்காட்சி மூலம் தெரிந்துகொள்ளலாம். இதுபோன்ற அனைத்து மண்டலத்தில் வேளாண் கண்காட்சி நடத்த வேண்டும் அதை விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளவும்
நிலத்தை 5வகையாக பிரித்த இனம் தமிழ் இனம். விவசாயிகளுக்கு எல்லா விஷயத்தில் துரோகம் செய்த ஆட்சி கடந்த ஆட்சி. உழவர்கள் உரிமைகள் பறிக்கும் சட்டம் எதிர்த்து டெல்லியில் விவசாயிகள் போராட்டம் நடத்திய போது சட்டத்தை ஆதரித்து பச்சை துரோகம் செய்தவர்கள் தான் அவர்கள் அதுபோன்ற ஆட்சியாளர்கள் களை எடுக்க வேண்டும். மீண்டும் திமுக 2.0 ஆட்சி தான் தமிழ்நாட்டில் அமைய உள்ளது”
இவ்வாறு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.