Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

"ராமர் கோயிலை நாங்கள் எதிர்க்கவில்லை" - திக் விஜய் சிங்

08:30 AM Jan 17, 2024 IST | Web Editor
Advertisement

அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்படுவதை காங்கிரஸ் எப்போதும் எதிர்த்தது கிடையாது என மத்திய பிரதேச முன்னாள் முதலமைச்சரும், காங். மூத்த தலைவருமான திக்விஜய் சிங் தெரிவித்துள்ளார்.

Advertisement

பாபர் மசூதி இடிப்பு வழக்கில் உச்சநீதிமன்றம் கடந்த 2019-ஆம் ஆண்டு அளித்த தீர்ப்பைத் தொடர்ந்து கடந்த 2020 ஆகஸ்ட் முதல்  பூமி பூஜை செய்யப்பட்டு அயோத்தியில் ராமர் கோயில் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. 2.27 ஏக்கர் பரப்பளவில் 3 அடுக்கில் உருவாகி வரும் ராமர் கோயிலின் கட்டுமானப் பணிகள் முடிவடையவுள்ள நிலையில், கோயில் கருவறையில் மூலவர் குழந்தை ராமர் சிலை வரும் ஜனவரி 22-ஆம் தேதி பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது. இந்த விழாவில் கலந்து கொள்ள நாடு முழுவதும் உள்ள பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை உத்தர பிரதேச மாநில அரசு தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. இந்த விழாவில் பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள், பாஜக ஆளும் மாநில முதலமைச்சர்கள் கலந்துகொள்ள உள்ளனர். தவிர எதிர்கட்சி தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

திரைத்துறை உள்பட பல்வேறு துறைகளை சேர்ந்த பிரபலங்களுக்கும் இந்த விழாவில் அழைப்பு விடுக்கப்பட்டு வருகிறது.  இவ்வாறு சன்னியாசிகள், மடாதிபதிகள், முக்கிய பிரமுகர்கள் என மொத்தம் 8,000 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

ஏற்கனவே எதிர்கட்சிக்கும் ராமர் கோயில் பிரதிஷ்டை விழாவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. காங்கிரஸ் இது மத விழா அல்ல , மதத்தை வைத்து நடைபெறும் அரசியல் விழா என புறக்கணித்தது. இதனைத் தொடர்ந்து சமாஜ்வாதி கட்சி, திரிணாமூல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சியும் அதிகாரப்பூர்வமாக புறக்கணித்துள்ளன. இந்த நிலையில் மத்திய பிரதேச முன்னாள் முதலமைச்சரும், காங். மூத்த தலைவருமான திக்விஜய் சிங் X தளத்தில் தெரிவித்துள்ளதாவது..

” அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்படுவதை காங்கிரஸ் எப்போதும் எதிர்த்தது கிடையாது . நீதிமன்றத்தின் தீர்ப்பு வரும் வரை காத்திருக்க வேண்டும் என்றே வலியுறுத்தினோம். பாஜக பாபர் மசூதியை இடித்தது; ஆனால் அங்கு கோயில் கட்டவில்லை; ஏனெனில் பாபர் மசூதி இடிக்கப்படும்வரை இது இந்து-முஸ்லிம் பிரச்னையாக மாறவில்லை; பிரச்னையை உருவாக்கி அரசியல் ஆதாயம் தேடுவதே பாஜகவின் உத்தி “ என திக்விஜய் சிங் தெரிவித்துள்ளார்.

Tags :
AyodhyaDig Vijay SingMadhya pradeshRam Mandhirram temple
Advertisement
Next Article