For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

"கூட்டணி குறித்து தீர ஆலோசித்து பொறுமையாக முடிவு எடுக்க உள்ளோம்" - சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார்

09:27 PM Feb 25, 2024 IST | Web Editor
 கூட்டணி குறித்து தீர ஆலோசித்து பொறுமையாக முடிவு எடுக்க உள்ளோம்    சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார்
Advertisement

கூட்டணி குறித்து தீர ஆலோசித்து பொறுமையாக முடிவு எடுக்க உள்ளோம் என சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் சரத்குமார் தெரிவித்துள்ளார். 

Advertisement

மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தமிழ்நாட்டில் கட்சிகள் இடையே கூட்டணி பேச்சுவார்த்தை தீவிரமாக நடைபெற்று வருகிறது.  தேர்தலுக்கான பணிகளில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.  இந்த நிலையில் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் உயர்மட்ட குழு கூட்டம், அக்கட்சியின் தலைவர் சரத்குமார் தலைமையில் இன்று (பிப்.25) கும்பகோணத்தில் நடைபெற்றது.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது: 

"தேர்தலில் யாருடன் கூட்டணி அமைப்பது என்பது குறித்து இன்று நடைபெற்ற கூட்டத்தில் உயர்மட்ட குழுவினர் தங்கள் கருத்துக்களை தெரிவித்தனர்.  அந்த கருத்துக்களை பரிசீலனை செய்து இறுதி முடிவெடுக்க உள்ளோம்.  ஒற்றைக் கருத்தாக இருந்தால் விரைவாக முடிவு எடுக்கலாம்.  ஆனால் தற்போது பல கருத்துகள் கூறப்பட்டுள்ளன.

சமத்துவ மக்கள் கட்சி 16 ஆண்டுகளைக் கடந்து 17-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.  நாங்கள் எடுக்கும் முடிவு வெற்றி பெறக்கூடியதாக இருக்க வேண்டும். தேர்தல் குறித்த அறிவிப்பு அடுத்த மாதம்தான் வர இருக்கிறது.  அதனால் கூட்டணி குறித்து தீர ஆலோசித்து பொறுமையாக முடிவு எடுக்க உள்ளோம்."

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Tags :
Advertisement