For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

வயநாடு நிலச்சரிவு - சூர்யா, கார்த்தி, ஜோதிகா ஆகியோர் ரூ.50 லட்சம் நிதியுதவி!

06:15 PM Aug 01, 2024 IST | Web Editor
வயநாடு நிலச்சரிவு   சூர்யா  கார்த்தி  ஜோதிகா ஆகியோர் ரூ 50 லட்சம் நிதியுதவி
Advertisement

கேரளா நிலச்சரிவு நிவாரண பணிகளுக்கு ரூ.50 லட்சம் கொடுத்து நடிகை ஜோதிகா, நடிகர்கள் கார்த்தி, சூர்யா ஆகியோர் உதவியுள்ளனர். 

Advertisement

கேரளா மாநிலம் வயநாட்டில் கடந்த 29ஆம் தேதி அடுத்தடுத்து மூன்றுமுறை நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவில் இரண்டு கிராமங்களே முழுதுவமாக சகதியில் மூழ்கியுள்ளது. 400 குடும்பங்களை சேர்ந்த 1000த்திற்கும் மேற்பட்டோர் இந்த நிலச்சரிவில் சிக்கினர். நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டு மக்கள் அதில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இதுவரை 280-க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். மேலும் உயிரிழப்புகள் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது. இந்த நிலச்சரிவால் நாடே சோகத்தில் மூழ்கியுள்ளது.

நிலச்சரிவின் மீட்பு பணிகள் இன்றுடன் மூன்றாவது நாளாக நடைபெற்று வருகிறது. இடிபாடுகளில் சிக்கிய உடல்கள் காண்போரை மட்டுமின்றி அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தி வருகிறது. இந்த பெருந்துயரில் மீள முடியாமல் மக்கள் பரிதவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், பெருந்துயரில் பங்கேற்கும் வகையில் கேரளா நிலச்சரிவு நிவாரண பணிகளுக்காக, நடிகை ஜோதிகா, நடிகர் கார்த்தி மற்றும் நடிகர் சூர்யா ஆகியோர் ரூ. 50 லட்சம் கேரள முதலமைச்சர் நிவாரண நிதிக்கு வழங்கியுள்ளார்கள். மேலும் நிலச்சரிவில் உயிரிழந்தவர்கள் குடும்பத்தாருக்கு ஆழந்த இரங்கலை தெரிவித்துள்ளனர்.

Tags :
Advertisement